முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

அரேபியர்- துருக்கியர் படையெடுப்பு

இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர்    முகமது நபி ( கி பி 570-632) அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை முதல் முதலில் பின்பற்றினர். அரேபியர்களை தொடர்ந்து பாரசீரர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினர். பின்னர் துருக்கியர்கள் இஸ்லாம் மதத்தை மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் பரப்பினர். அரேபியர்கள் படையெடுப்பு: அரேபியர் முதலில் படையெடுத்தது சிந்து பகுதி. ஈராக் ஆளுநர் அல்ஹஜாஜ், கலீபா வாலித் அனுமதியுடன் தனது மருமகன் முகமது பின் காசிம்-ஐ சிந்து மீது படையெடுக்க அனுப்பினார். சிந்துவின் மன்னர்- தாகீர் போரில் தோற்றார். இப்போர் ரேவார் போர் என அழைக்கப்படுகிறது. முல்தான் நகரம் ( தங்க நகரம் என காசிம் அழைத்தார்) கைப்பற்றப்பட்டது. நிர்வாக அமைப்பு: மாவட்டங்களாக (இக்தார்களாக ) பிரிக்கப்பட்டன. தலைவர்களாக தனது படை அதிகாரிகளை நியமித்தார். முஸ்லீம் அல்லாதோர் மீது ஜிசியா வரி கட்டாயப்படுத்தப்பட்டது. முகமது-பின் - காசிம் முடிவு: கலீபா வாலித் -க்கு பின் சுலைமான் கலீபா என்பவர் பதவிக்கு வந்தார். அவர் ஆளுநர் அல்ஹஜாஜின் எதிரியாவார் . முகமது-பின் - காசிம் அவரால் சிறை வைக்கப்பட்டார். 150 ஆண்டுகள் கலீபா ஆட...