முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரேபியர்- துருக்கியர் படையெடுப்பு


  • இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர்   முகமது நபி ( கி பி 570-632)
  • அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை முதல் முதலில் பின்பற்றினர்.
  • அரேபியர்களை தொடர்ந்து பாரசீரர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினர்.
  • பின்னர் துருக்கியர்கள் இஸ்லாம் மதத்தை மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் பரப்பினர்.

அரேபியர்கள் படையெடுப்பு:

  • அரேபியர் முதலில் படையெடுத்தது சிந்து பகுதி.
  • ஈராக் ஆளுநர் அல்ஹஜாஜ், கலீபா வாலித் அனுமதியுடன் தனது மருமகன் முகமது பின் காசிம்-ஐ சிந்து மீது படையெடுக்க அனுப்பினார்.
  • சிந்துவின் மன்னர்- தாகீர் போரில் தோற்றார். இப்போர் ரேவார் போர் என அழைக்கப்படுகிறது.
  • முல்தான் நகரம் ( தங்க நகரம் என காசிம் அழைத்தார்) கைப்பற்றப்பட்டது.

நிர்வாக அமைப்பு:

  • மாவட்டங்களாக (இக்தார்களாக ) பிரிக்கப்பட்டன.
  • தலைவர்களாக தனது படை அதிகாரிகளை நியமித்தார்.
  • முஸ்லீம் அல்லாதோர் மீது ஜிசியா வரி கட்டாயப்படுத்தப்பட்டது.
முகமது-பின் - காசிம் முடிவு:
  • கலீபா வாலித்-க்கு பின் சுலைமான் கலீபா என்பவர் பதவிக்கு வந்தார்.
  • அவர் ஆளுநர் அல்ஹஜாஜின் எதிரியாவார் .
  • முகமது-பின் - காசிம் அவரால் சிறை வைக்கப்பட்டார்.
  • 150 ஆண்டுகள் கலீபா ஆட்சியில் முல்தான் மற்றும் சிந்து இருந்தது.
அரேபிய படையெடுப்பின் விளைவுகள்:
  • இஸ்லாமியர் இந்தியாவிற்கு வருவதற்கு வழிவகுத்தனர்.
  • இந்தியர்களிடம் இருந்து புதிய விஷயங்கள் பலவற்றை கற்றுக்கொண்டனர்.
  • பிரம்மகுப்தர் எழுதிய பிரம்மசித்தாந்தம் என்ற சமஸ்கிருத நூலை அரபு மொழி பெயர்த்தனர்.
  • பாக்தாத் நகரின் தலைமை மருத்துவராக தாணா என்ற இந்தியர் நியமிக்கப்பட்டார்.

துருக்கிய படையெடுப்பு:

முகமது கஜினி:

  • கஜினியின் அரசர் - சபுக்டிஜின்
  • அவருக்கு பின் இஸ்மாயில் என்பவர் பதவிக்கு வந்தார்.
  • அவரது சகோதரன் முகமது கஜினி அவரை அரச பதவியில் இருந்து நீக்கிவிட்டு பதவியில் அமர்ந்தார்.
  • கி.பி 1000 ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்தார் முகமது கஜினி.
  • சாஹி மரபை சேர்ந்த இந்து அரசர் ஜெயபாலரை தோற்கடித்தார்.
  • ஒவ்வொரு படையெடுப்பின் போதும் இவர் அளவில்லா செல்வங்களை இந்தியாவிலிருந்து எடுத்து சென்றார்.
  • முகமது கஜினியின் முக்கிய படையெடுப்பு- கி.பி. 1025 சோமநாதபுரம் படையெடுப்பு.

சோமநாதபுரம் படையெடுப்பு:

  • சோமநாதபுரம் கத்தியவார் தீபகற்பத்தில் உள்ளது.
  • மன்னர்- இராஜாபீமதேவன்.
  • கஜினியின் படையெடுப்பின் போது அரண்மனையைவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
  • இங்கே இருபது லட்சம் தினார் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்டார் கஜினி.
  • சர் ஹென்றி எலியட் எழுதிய இந்திய வரலாறு என்னும் நூலில் முகமதுகஜினியின் 17 படையெடுப்புகள் பற்றி கூறியுள்ளார்.
  • கி.பி. 1186 ஆம் ஆண்டு கஜினியை கைப்பற்றினார் கோரி மரபினை சேர்ந்த அலாவுதீன் உசேன்.

முகமது கோரி:

  • ஹீரட்டு மற்றும் கஜினிக்கு இடையில் இருந்த மலைப்பகுதியே கோரி ஆகும்.
  • முகமது இதன் மன்னராவார். கோரியின் மன்னர் ஆதலால் இவர் முகமது கோரி என அழைக்கப்பட்டார்.

படையெடுப்புகள்:

  • கி.பி.1176 ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்தார்.
  • முல்தான், உச் ஆகிய இடங்களை கைப்பற்றினார்.
  • 1182- சிந்து பள்ளத்தாக்கை கைப்பற்றினார்.
  • 1185- பஞ்சாபை வென்று சியால்கோட் கோட்டையை பிடித்தார்.
  • 1186 - லாகூரை வென்றார்.

முதலாம் தரைன் போர் ( கி.பி. 1191 ):

  • கி.பி. 1189 ஆம் ஆண்டு முகமது கோரி பதின்டா கோட்டையை வென்று இராஜபுத்திர அரசர் பிருதிவிராச சௌகான் நாட்டுக்குள் நுழைந்தார்.
  • ஆனால் கோரி தோல்விஅடைந்தார்.
  • கி.பி.1191 பதின்டா கோட்டையை பிருதிவிராசன் மீட்டார்.

இரண்டாம் தரைன் போர் ( கி.பி.1192 ):

  • கி.பி. 1192 ஆம் ஆண்டு மீண்டும் பிரிதிவிராசனுடன் மோதினார் கோரி.
  • போரில் வென்று அந்நாட்டிற்கு ஆளுநராக குத்புத்தீன் ஐபக் என்பவரை நியமித்தார்.
  • இராஜபுத்திர வம்சத்தை செர்ந்தவர்கள் தங்கள் அரசை மீட்க முயன்றனர் ஆனால் முடியவில்லை.

சந்தவார் போர் (கி.பி. 1194 ):

  • கனோஜ் பகுதியை ஆண்ட இராஜபுத்திர மன்னர் ஜெயசந்திரனை போரிட்டு வென்றார்.
  • போர் நடைபெற்ற இடம் - சந்தவார்
  • கி.பி.1206 ஆம் ஆண்டு முகமது கோரி புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:   பாபர்( 1526-1530)     | உமாயூன்1530-40, 1555-56)     | அக்பர்(1556-1605)     | ஜஹாங்கீர்( 1605-1627)     | ஷாஜகான்( 1628-1658)     | ஔரங்கசீப்( 1658-1707) பாபர் பிறப்பு: 1483 இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர். தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்) தாய்: செங்கிஸ்கான் இனம் 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார் 1526- முதல் பானிபட் போர் 1527- கான்வா போர் - மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார் 1528- சந்தேரி போர் - மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார் 1529- காக்ரா போர் - முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். 1530- மரணித்தார். இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி உமாயூன்: பிறப்பு- 1508 உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள். 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார். 1530ல் ஆட்சி பொறப்பேற்றார். சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது. 1539 - சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார். 1540 - கன்னோசி போரிலும் தோற்றார். 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோட...