- இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் முகமது நபி ( கி பி 570-632)
- அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை முதல் முதலில் பின்பற்றினர்.
- அரேபியர்களை தொடர்ந்து பாரசீரர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினர்.
- பின்னர் துருக்கியர்கள் இஸ்லாம் மதத்தை மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் பரப்பினர்.
அரேபியர்கள் படையெடுப்பு:
- அரேபியர் முதலில் படையெடுத்தது சிந்து பகுதி.
- ஈராக் ஆளுநர் அல்ஹஜாஜ், கலீபா வாலித் அனுமதியுடன் தனது மருமகன் முகமது பின் காசிம்-ஐ சிந்து மீது படையெடுக்க அனுப்பினார்.
- சிந்துவின் மன்னர்- தாகீர் போரில் தோற்றார். இப்போர் ரேவார் போர் என அழைக்கப்படுகிறது.
- முல்தான் நகரம் ( தங்க நகரம் என காசிம் அழைத்தார்) கைப்பற்றப்பட்டது.
நிர்வாக அமைப்பு:
- மாவட்டங்களாக (இக்தார்களாக ) பிரிக்கப்பட்டன.
- தலைவர்களாக தனது படை அதிகாரிகளை நியமித்தார்.
- முஸ்லீம் அல்லாதோர் மீது ஜிசியா வரி கட்டாயப்படுத்தப்பட்டது.
முகமது-பின் - காசிம் முடிவு:
- கலீபா வாலித்-க்கு பின் சுலைமான் கலீபா என்பவர் பதவிக்கு வந்தார்.
- அவர் ஆளுநர் அல்ஹஜாஜின் எதிரியாவார் .
- முகமது-பின் - காசிம் அவரால் சிறை வைக்கப்பட்டார்.
- 150 ஆண்டுகள் கலீபா ஆட்சியில் முல்தான் மற்றும் சிந்து இருந்தது.
அரேபிய படையெடுப்பின் விளைவுகள்:
- இஸ்லாமியர் இந்தியாவிற்கு வருவதற்கு வழிவகுத்தனர்.
- இந்தியர்களிடம் இருந்து புதிய விஷயங்கள் பலவற்றை கற்றுக்கொண்டனர்.
- பிரம்மகுப்தர் எழுதிய பிரம்மசித்தாந்தம் என்ற சமஸ்கிருத நூலை அரபு மொழி பெயர்த்தனர்.
- பாக்தாத் நகரின் தலைமை மருத்துவராக தாணா என்ற இந்தியர் நியமிக்கப்பட்டார்.
துருக்கிய படையெடுப்பு:
முகமது கஜினி:
- கஜினியின் அரசர் - சபுக்டிஜின்
- அவருக்கு பின் இஸ்மாயில் என்பவர் பதவிக்கு வந்தார்.
- அவரது சகோதரன் முகமது கஜினி அவரை அரச பதவியில் இருந்து நீக்கிவிட்டு பதவியில் அமர்ந்தார்.
- கி.பி 1000 ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்தார் முகமது கஜினி.
- சாஹி மரபை சேர்ந்த இந்து அரசர் ஜெயபாலரை தோற்கடித்தார்.
- ஒவ்வொரு படையெடுப்பின் போதும் இவர் அளவில்லா செல்வங்களை இந்தியாவிலிருந்து எடுத்து சென்றார்.
- முகமது கஜினியின் முக்கிய படையெடுப்பு- கி.பி. 1025 சோமநாதபுரம் படையெடுப்பு.
சோமநாதபுரம் படையெடுப்பு:
- சோமநாதபுரம் கத்தியவார் தீபகற்பத்தில் உள்ளது.
- மன்னர்- இராஜாபீமதேவன்.
- கஜினியின் படையெடுப்பின் போது அரண்மனையைவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
- இங்கே இருபது லட்சம் தினார் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்டார் கஜினி.
- சர் ஹென்றி எலியட் எழுதிய இந்திய வரலாறு என்னும் நூலில் முகமதுகஜினியின் 17 படையெடுப்புகள் பற்றி கூறியுள்ளார்.
- கி.பி. 1186 ஆம் ஆண்டு கஜினியை கைப்பற்றினார் கோரி மரபினை சேர்ந்த அலாவுதீன் உசேன்.
முகமது கோரி:
- ஹீரட்டு மற்றும் கஜினிக்கு இடையில் இருந்த மலைப்பகுதியே கோரி ஆகும்.
- முகமது இதன் மன்னராவார். கோரியின் மன்னர் ஆதலால் இவர் முகமது கோரி என அழைக்கப்பட்டார்.
படையெடுப்புகள்:
- கி.பி.1176 ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்தார்.
- முல்தான், உச் ஆகிய இடங்களை கைப்பற்றினார்.
- 1182- சிந்து பள்ளத்தாக்கை கைப்பற்றினார்.
- 1185- பஞ்சாபை வென்று சியால்கோட் கோட்டையை பிடித்தார்.
- 1186 - லாகூரை வென்றார்.
முதலாம் தரைன் போர் ( கி.பி. 1191 ):
- கி.பி. 1189 ஆம் ஆண்டு முகமது கோரி பதின்டா கோட்டையை வென்று இராஜபுத்திர அரசர் பிருதிவிராச சௌகான் நாட்டுக்குள் நுழைந்தார்.
- ஆனால் கோரி தோல்விஅடைந்தார்.
- கி.பி.1191 பதின்டா கோட்டையை பிருதிவிராசன் மீட்டார்.
இரண்டாம் தரைன் போர் ( கி.பி.1192 ):
- கி.பி. 1192 ஆம் ஆண்டு மீண்டும் பிரிதிவிராசனுடன் மோதினார் கோரி.
- போரில் வென்று அந்நாட்டிற்கு ஆளுநராக குத்புத்தீன் ஐபக் என்பவரை நியமித்தார்.
- இராஜபுத்திர வம்சத்தை செர்ந்தவர்கள் தங்கள் அரசை மீட்க முயன்றனர் ஆனால் முடியவில்லை.
சந்தவார் போர் (கி.பி. 1194 ):
- கனோஜ் பகுதியை ஆண்ட இராஜபுத்திர மன்னர் ஜெயசந்திரனை போரிட்டு வென்றார்.
- போர் நடைபெற்ற இடம் - சந்தவார்
- கி.பி.1206 ஆம் ஆண்டு முகமது கோரி புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக