மராத்தியர்கள்:
- தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள்.
- கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.
சிவாஜி:
- தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்)
- தாய் :ஜீஜாபாய்
- 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டையில் சிவாஜி பிறந்தார்.
- இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை.
- 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார்.
- 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார்.
- 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
- இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங்-ஐ அனுப்பினார்.
- 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார்.
- 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது.
- 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜியுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
- சிவாஜி அங்கிருந்து தப்பித்து வெளி வந்தார்.
- ஔரங்கசீப் சிவாஜியை மலை எலி என்றும் தக்காண புற்றுநோய் என்றும் அழைத்தார்.
- 1674 ஆம் ஆண்டு சிவாஜிக்கு ரெய்கார் கோட்டையில் முடிச்சூட்டப்பட்டது.
- சத்திரபதி என்னும் பட்டத்தை அவர் சூட்டிக்கொண்டார்.
- 1680 ஆம் ஆண்டு சிவாஜி ரெய்காரில் மரணித்தார்.
- சிவாஜியின் சபையில் அஷ்டப்பிரதான் என அழைக்கப்பட்ட 8 முக்கிய அமைச்சர்கள் இருந்தனர்.
- இவரது பேரரசு சுயராஜ்யம் எனப்பட்டது.
- விவசாய வரியாக விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கினை விதித்தார்.
- பட்டேல் என்பவர் குற்றவியல் வழக்குகளை விசாரித்தார்.
- ஜமிந்தாரி முறையை ஒழித்தார்.
- சிவாஜியின் அவை பிரதம அமைச்சர்கள் பேஷ்வாக்கள் எனப்பட்டனர்.
பேஷ்வாக்கள்:
- பேஷ்வாக்களின் ஆட்சி 1713 ஆம் ஆண்டு தொடங்கியது.
- முதல் பேஷ்வாவாக பாலாஜி விஸ்வநாத் பொறுப்பேற்றார்.
- 1720 ஆம் ஆண்டு இரண்டாவது பேஷ்வாவாக பாலாஜி விஸ்வநாத்-ன் மகன் பாஜிராவ் பதவி ஏற்றார்.
- மூன்றாவது பேஷ்வாவாக பாலாஜி பாஜிராவ் ( 1740-1761) பதவி ஏற்றார்.
- இவரது ஆலோசகர் சதாசிவராவ் ஆவார்.இவரது அறிவுரையில் 1758-ல் மராத்தியர் புகழின் உச்சத்தை தொட்டது.
- பஞ்சாப்-ஐ கைப்பற்றி அட்டாக்கோட்டையில் மராத்திய கொடியை பறக்க விட்டார். இது ஆப்கானிய அரசருடன் மோதலை ஏற்படுத்தியது.
- 1761 ஆம் ஆண்டு ஆப்கானிய அரசர் அகமது ஷா படையெடுத்தார் இப்போர் பானிபட் போர் களத்தில் நடைப்பெற்றது. இது வரலாற்றில் மூன்றாவது பானிபட் போர் என அழைக்கப்படுகிறது.
- இப்படையெடுப்பிற்கு பிறகு மராத்திய அரசு விழ்ச்சியுற்றது.
நாதிர்ஷா:
- பாரசீக போர்வீரர்.
- 1739 ஆம் ஆண்டு முகலாயர்களை பழிவாங்குவதற்கு படையெடுத்தார்.
Hi mam send me Extra details here suvetharavi1998@gmail.com
பதிலளிநீக்கு