முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்:

  • தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள்.
  • கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.
 சிவாஜி:
  • தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்)
  • தாய் :ஜீஜாபாய்
  • 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டையில் சிவாஜி பிறந்தார்.
  • இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை.
  • 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார்.
  • 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார்.
  • 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
  • இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங்-ஐ அனுப்பினார்.
  • 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார்.
  • 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது.
  • 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜியுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
  • சிவாஜி அங்கிருந்து தப்பித்து வெளி வந்தார்.
  • ஔரங்கசீப் சிவாஜியை மலை எலி என்றும் தக்காண புற்றுநோய் என்றும் அழைத்தார்.
  • 1674 ஆம் ஆண்டு சிவாஜிக்கு ரெய்கார் கோட்டையில் முடிச்சூட்டப்பட்டது.
  • சத்திரபதி என்னும் பட்டத்தை அவர் சூட்டிக்கொண்டார்.
  • 1680 ஆம் ஆண்டு சிவாஜி ரெய்காரில் மரணித்தார்.
  • சிவாஜியின் சபையில் அஷ்டப்பிரதான் என அழைக்கப்பட்ட 8 முக்கிய அமைச்சர்கள் இருந்தனர்.
  • இவரது பேரரசு சுயராஜ்யம் எனப்பட்டது.
  •  விவசாய வரியாக விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கினை விதித்தார்.
  • பட்டேல் என்பவர் குற்றவியல் வழக்குகளை விசாரித்தார்.
  • ஜமிந்தாரி முறையை ஒழித்தார்.
  • சிவாஜியின் அவை பிரதம அமைச்சர்கள் பேஷ்வாக்கள் எனப்பட்டனர்.
பேஷ்வாக்கள்:

  • பேஷ்வாக்களின் ஆட்சி 1713 ஆம் ஆண்டு தொடங்கியது.
  • முதல் பேஷ்வாவாக பாலாஜி விஸ்வநாத் பொறுப்பேற்றார்.
  • 1720 ஆம் ஆண்டு இரண்டாவது பேஷ்வாவாக பாலாஜி விஸ்வநாத்-ன் மகன் பாஜிராவ் பதவி ஏற்றார்.
  • மூன்றாவது பேஷ்வாவாக பாலாஜி பாஜிராவ் ( 1740-1761) பதவி ஏற்றார்.
  • இவரது ஆலோசகர் சதாசிவராவ் ஆவார்.இவரது அறிவுரையில் 1758-ல் மராத்தியர் புகழின் உச்சத்தை தொட்டது.
  • பஞ்சாப்-ஐ கைப்பற்றி அட்டாக்கோட்டையில் மராத்திய கொடியை பறக்க விட்டார். இது ஆப்கானிய அரசருடன் மோதலை ஏற்படுத்தியது.
  • 1761 ஆம் ஆண்டு ஆப்கானிய அரசர் அகமது ஷா படையெடுத்தார் இப்போர் பானிபட் போர் களத்தில் நடைப்பெற்றது. இது வரலாற்றில் மூன்றாவது பானிபட் போர் என அழைக்கப்படுகிறது.
  • இப்படையெடுப்பிற்கு பிறகு மராத்திய அரசு விழ்ச்சியுற்றது.
  நாதிர்ஷா:
  • பாரசீக போர்வீரர்.
  • 1739 ஆம் ஆண்டு முகலாயர்களை பழிவாங்குவதற்கு படையெடுத்தார்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:   பாபர்( 1526-1530)     | உமாயூன்1530-40, 1555-56)     | அக்பர்(1556-1605)     | ஜஹாங்கீர்( 1605-1627)     | ஷாஜகான்( 1628-1658)     | ஔரங்கசீப்( 1658-1707) பாபர் பிறப்பு: 1483 இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர். தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்) தாய்: செங்கிஸ்கான் இனம் 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார் 1526- முதல் பானிபட் போர் 1527- கான்வா போர் - மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார் 1528- சந்தேரி போர் - மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார் 1529- காக்ரா போர் - முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். 1530- மரணித்தார். இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி உமாயூன்: பிறப்பு- 1508 உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள். 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார். 1530ல் ஆட்சி பொறப்பேற்றார். சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது. 1539 - சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார். 1540 - கன்னோசி போரிலும் தோற்றார். 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோட...