முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறாம் வகுப்பு - வரலாறு- மூன்றாம் பருவம்

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்-மூன்றாம் பருவம்


மகா ஜனபதங்கள்

     
  • மகாஜனபதங்கள்- சமஸ்கிருத மொழி சொல்- பெரிய அரசு என்பது பொருள்.
  • பல ஜனபதங்கள் உள்ளடக்கிய பெரிய அமைப்பு மகாஜனபதங்கள் எனப்பட்டன.
  • வைசாலி நகரை தலைநகராக கொண்ட வஜ்ஜிக் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இணைந்து இருந்தன.
  • கோசலம், அவந்தி, வத்சம், மகதம்- பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்கள் ஆகும்.
  •  இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னா-வை சுற்றியுள்ள பகுதி மகதம் எனப்பட்டது. இதன் தலைநகர்
              1. சிராவஸ்தி
              2. இராஜகிருகம்
              3. பாடலிபுத்திரம்

மகத்தின் எழுச்சி


பிம்பிசாரர்- அஜாத சத்ரு

பிம்பிசாரர்
  • ஆரியங்க வம்சத்தை சேர்ந்தவர்.
  • படையெடுப்புகள், திருமண உறவுகள் முலம் மகத்தை விரிவுப்படுத்தினார்.
  • பிம்பிசாரரின் மகன் அஜாத சத்ரு.
அஜாத சத்ரு
  • தந்தையை சிறையில் அடைத்து ஆட்சியை கைப்பற்றினார்.
  • பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தார்.

சிசுநாகன் - மகாபத்மநந்தன்


சிசுநாகர்

  • அஜாதசத்ருவுக்கு பின் மகதத்தின் புகழை நிலை நாட்டியவர் சிசுநாகர்.
  • வைசாலியில் இரண்டாவது புத்த மத மாநாட்டை நடத்தினார்.
  • அரியங்க வம்சத்தை விழ்த்தி சிசுநாகர் ஆட்சியை பிடித்தார்.

நந்த வம்சம்

  • முதல் நந்த வம்ச மன்னர்- மகாபத்மநந்தன்.
  • சமூகத்தின் கடைசி நிலையில் இருந்த சூத்திரர்களான சிசுநாகரும் மகாபத்மநந்தரும் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடதக்கது.
மௌரிய பேரரசு

சந்திரகுப்த மௌரியர்:

  • தனநந்தரை வென்று மகதத்தை கைப்பற்றினார்.
  • அலெக்‌ஸாண்டரையும் அவரத்உ தளபதி செலுகஸ் நிகேடாரையும் வென்றார்.
  • மெகஸ்தனிஸ் ( செலுகஸ் நிகேடாரின் தூதுவர்) பாடலிபுத்திரத்தில் தங்கி இந்தியாவை பற்றி இண்டிகா என்னும் புத்தகத்தை எழுதினார்.
  • இவர் சமண சமயத்தை தழுவி துறவியாக மாறி சமண முனிவர் பத்திரபாகு என்பவருடன் சென்றார்.
  • 2001 ஆம் ஆண்டு சந்திரகுப்த மௌரியரின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
  • இந்திய வரலாற்றின் தலை சிறந்த மன்னர் இவர்.
அசோகர்

  • சந்திரகுப்தருக்கு பின் அவரது மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
  • பிந்துசாரருக்கு பின் அவரது மகன் அசோகர் ஆட்சி பொறுப்பேற்றார் (273-236).
  • கலிங்கத்துடன் போரிட்டு மௌரிய பேரரசுடன் இணைத்தார். ஆனால் இப்போருக்கு பின் போரிடுவதை கைவிட்டார்.
  • திக் விஜயத்தை வெறுத்து தர்ம விஜயத்தை மேற்கொண்டார்.
  • சாதி மத வேறுபாடற்ற சத்திரங்கள் மருத்துவமனைகள் ஆரம்பித்தார்.
  • உயிர்பலியிடும் சடங்குகளுக்கு தடை, உயிர்வதை தடுப்பு, தண்டனை விதிகளில் மாற்றம் செய்தார்.
  • வட்டார மொழிகளில் கல்வெட்டுகள் எழுத செய்தார்.
  • தர்ம மகாமத்திரர்கள் ( மக்களுக்கு உதவும் சிறப்பு பணியாளர்கள் ) நியமிக்கப்பட்டனர்.
  • இந்தியாவின் முதல் மக்கள் நல அரசு அசோகரது அரசு.
  • அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார்.
  • பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாட்டை நடத்தினார்.
  • பௌத்த சமயத்தை பரப்ப இலங்கைக்கு அவரது மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையும் அனுப்பி வைத்தார். 
  • சாஞ்சி, சாரநாத், லூம்பினி போன்றவை அசோகர் காலத்து கலையழகு மிகுந்த பௌத்த தூபிகள்.
  • அசோகர் நிறுவிய கற்றூண்கள் பாரசீக சிற்பக்கலையின் தாக்கம் கொண்டவை. இதில் தாமரை மலர் தலைகீழாக இருக்கும்.
  • இவரது காலத்து கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டது.
  • வடமேற்கு எல்லை பகுதியில் கரோஸ்தி என்னும் மொழியில் எழுதப்பட்டது.
  • ஆப்கானிஸ்தான் பகுதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.
மௌரிய ஆட்சி முறை

அசோக பேரரசு:
  1. வடக்கு- தட்சசீலம்
  2. தெற்கு- சுவர்ணகிரி
  3. மையம்- பாடலிபுத்திரம்
  4. கிழக்கு- தோசாலி
  5. மேற்கு- உஜ்ஜியினி
  • அமைச்சர்கள் நியமணம் சாதி மத பேதமின்றி இருந்தது.
  • மகாமாந்திரர்- மாநில அதிகாரி மற்றும் ஆளுநர் ஆவார்.
  • அந்த மகாமாத்திரர்- பாதுகாப்பை கண்காணித்தோர்.
  • நகரங்களில் உள்ளாட்சி அமைப்பு இருந்த்து.
  • மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் பிருகத்திரதன் ஆவான். இவன் இவனது படைத்தலைவன் புஷ்யமித்ரசுங்கன் என்பவனால் கொல்லப்பட்டான்.
குஷானப் பேரரசு:
  • மௌரியர்களுக்கு பின் இந்தியாவில் நிறுவப்பட்ட வலுமையான அரசு குஷான பேரரசு.
  • யூச்சி என்னும் இனத்தின் உட்பிரிவு குஷானர்கள்.
  • இந்தியாவின் வடமேற்கு பகுதியில் முதலாம் நூற்றாண்டில் குஷானப் பேரரசை முதலாம் காட்பிஸஸ் நிறுவினார்.
  • அவருக்கு பின் இரண்டாம் காட்பிஸஸ் ( கி.பி 65- 75) ஆட்சி செய்தார்.
கனிஷ்கர்:
  • இரண்டாம் காட்பிஸஸ் இறந்த பின் கனிஷ்கர் (கி.பி 78-101) குஷான அரியணையை கைப்பற்றினார்.
  • குஷான வம்சத்தின் தலை சிறந்த மன்னர் இவர்.
  • சாகசத்திரபர்களை அடிபணிய வைத்தார்.
  • சீனாமீது படையெடுத்தார் முதல் முறை தளபதி பாஞ்ஞோ என்பவரிடம் தோற்றார். இரண்டாவது முறை அவரை வென்றார்.
  • புருஷபுரம் என்னும் பெஷாவரை தலைநகராக அமைத்தார்.
  • நான்காவது பௌத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.
  • இந்த மாநாட்டில் மகாயான பௌத்த சமயப்பிரிவு தோன்றியது.
  • மகாயான பௌத்த அறிஞர் அசுவகோஷர்  வடமொழியில் புத்தசரிதம், சூத்திராலங்காரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • வசுமித்திரர்- மகாவிபாசா என்ற சாத்திர நூலை எழுதியுள்ளார்.
  • நாகார்ஜூனர் தத்துவ நூல்கள் எழுதுயுள்ளார்.
  • மருத்துவ வல்லுனர் சரகர், கிரேக்க கட்டடக்கலை வல்லுனர் எஜிலாஸீம் இவரது அரசவையில் இருந்தனர்.
  • இவர் இரண்டாம் அசோகர் என்று போற்றப்பட்டார்.
  • இவரது காலத்தை அடிப்படையாக கொண்டு சக சகாப்தம் என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவானது.
குப்த பேரரசு:
  • பாடலிபுத்திரத்தை தலைநகராக கொண்டு உருவான பேரரசு குப்த பேரரசு. குஷான பேரரசுக்கு பின் மகதத்தில் உருவானது.
  • குப்த வம்சத்தின் முதல் சுகந்திர மன்னராக முதலாம் சந்திர குப்தர் (கி.பி 319- 335) குறிப்பிடப்படுகிறார்.
  • குப்த யுகம் என்னும் காலக்கணகீடு புகுத்தப்பட்டது.
  • சந்திர குப்தருக்கு பின் பட்டத்திற்கு வந்தவர் சமுத்திர குப்தர். இவரது படையெடுப்பு வெற்றிகளை அலகாபாத் கல்வெட்டு கூறுகிறது.
  • அலகாபாத் கல்வெட்டை பொறித்தவர் சமுத்திர குப்தரின் அமைச்சர் அரிசேனர் ஆவார்.
  • சமுத்திர குப்தருக்கு பின் இரண்டாம் சந்திர குப்தர் ஆட்சிக்கு வந்தார் (கி.பி 380-414).
  • இராமாயணம், மகாபாரதம் மற்றும் 18 புராணங்கள் தொகுக்கப்பட்டன.
  • பஞ்சதந்திர கதைகள் இயற்றப்பட்டன.
  • சமஸ்கிருத மொழி ஆட்சி மொழியாக இருந்தது.
  • கணித அறிஞர் ஆரியபட்டர் மற்றும் வானியியல் அறிஞர் வராகமிகிரர் குப்த காலத்தை சேர்ந்தவர்கள்.
  • சரகர், சுசுருதர், தன்வந்திரி ஆகிய மருத்துவ அறிஞர்களும் குப்த காலத்தை சேர்ந்தவர்கள்.
  • 1500 ஆண்டுகள் பழமையான மெகரௌலி இரும்புத்தூண் குப்தர்கள் காலத்தை சேர்ந்தது.
  • குமாரகுப்தர் நாளந்தா பல்கலைகழகத்தை உருவாக்கினார்.
  • குப்தர்கல் காலம் பொற்காலம் என கருதப்படுகிறது.
ஹர்ஷப் பேரரசு:

  • வட இந்தியாவில் குப்த பேரரசுக்கு பின் மீண்டும் ஒரு பேரரசை உருவாக்கியவர் தானேஸ்வரத்தின் அரசர் ஹர்ஷவர்த்தனர் (கி.பி606-647).
  • சசாங்கன் - ஹர்ஷரின் அண்ணனை கொன்றவன்.
  • பாஸ்கரவர்மன் - ஹர்ஷருக்கு உதவி செய்த காமரூப் (அஸ்ஸாம்) மன்னன்.
  • ராஜஶ்ரீ- ஹர்ஷரின் தங்கை
  • தங்கையின் விருப்பத்திற்கு ஏற்ப கன்னோசிக்கு மன்னரானார். அதுவே அவரது தலைநகராகும்.
  • இவரது தங்கை மற்றும் சீன அறிஞர் யுவான்சுவாங் ஆகியோரால் பௌத்த சமயத்தை தழுவினார்.
  • கன்னோசி மற்றுன் பிரயாகை ஆகிய இடத்தில் சமய மாநாட்டை நடத்தினார்.
  • நாளந்தா பல்கலைகழகம் இவரது காலத்தில் உலக புகழ் பெற்றது.
  • சமஸ்கிருத மொழி அறிஞர் பாணர் இவரது அமைச்சராக இருந்தார்.
  • பாணர்- ஹர்ஷ சரிதம் என்னும் நூலை எழுதினார்.
  • ஹர்ஷர் வடமொழியில் புலமை பெற்றவர். இவர் நாகானந்தம், ரத்னாவளி, பிரியதர்சிகா என்னும் நூல்களை எழுதியுள்ளார்.
  • சி-யு-கி என்பது யுவான்சுவாங் எழுதிய பயண நூல்.
  • வட இந்தியாவின் கடைசி பேரரசு ஹர்ஷ பேரரசு ஆகும்.

கருத்துகள்

  1. Hi mam please add current affairs, Tamil, geography, Indian polity, economics, physics, chemistry, zoology, botany for upcoming group 4 exam mam please send me mam as soon as possible mam

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:   பாபர்( 1526-1530)     | உமாயூன்1530-40, 1555-56)     | அக்பர்(1556-1605)     | ஜஹாங்கீர்( 1605-1627)     | ஷாஜகான்( 1628-1658)     | ஔரங்கசீப்( 1658-1707) பாபர் பிறப்பு: 1483 இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர். தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்) தாய்: செங்கிஸ்கான் இனம் 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார் 1526- முதல் பானிபட் போர் 1527- கான்வா போர் - மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார் 1528- சந்தேரி போர் - மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார் 1529- காக்ரா போர் - முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். 1530- மரணித்தார். இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி உமாயூன்: பிறப்பு- 1508 உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள். 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார். 1530ல் ஆட்சி பொறப்பேற்றார். சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது. 1539 - சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார். 1540 - கன்னோசி போரிலும் தோற்றார். 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோட...