ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்-மூன்றாம் பருவம்
மகா ஜனபதங்கள்
- மகாஜனபதங்கள்- சமஸ்கிருத மொழி சொல்- பெரிய அரசு என்பது பொருள்.
- பல ஜனபதங்கள் உள்ளடக்கிய பெரிய அமைப்பு மகாஜனபதங்கள் எனப்பட்டன.
- வைசாலி நகரை தலைநகராக கொண்ட வஜ்ஜிக் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இணைந்து இருந்தன.
- கோசலம், அவந்தி, வத்சம், மகதம்- பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்கள் ஆகும்.
- இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னா-வை சுற்றியுள்ள பகுதி மகதம் எனப்பட்டது. இதன் தலைநகர்
- சிராவஸ்தி
- இராஜகிருகம்
- பாடலிபுத்திரம்
மகத்தின் எழுச்சி
பிம்பிசாரர்- அஜாத சத்ரு
பிம்பிசாரர்
- ஆரியங்க வம்சத்தை சேர்ந்தவர்.
- படையெடுப்புகள், திருமண உறவுகள் முலம் மகத்தை விரிவுப்படுத்தினார்.
- பிம்பிசாரரின் மகன் அஜாத சத்ரு.
அஜாத சத்ரு
- தந்தையை சிறையில் அடைத்து ஆட்சியை கைப்பற்றினார்.
- பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தார்.
சிசுநாகன் - மகாபத்மநந்தன்
சிசுநாகர்
- அஜாதசத்ருவுக்கு பின் மகதத்தின் புகழை நிலை நாட்டியவர் சிசுநாகர்.
- வைசாலியில் இரண்டாவது புத்த மத மாநாட்டை நடத்தினார்.
- அரியங்க வம்சத்தை விழ்த்தி சிசுநாகர் ஆட்சியை பிடித்தார்.
நந்த வம்சம்
- முதல் நந்த வம்ச மன்னர்- மகாபத்மநந்தன்.
- சமூகத்தின் கடைசி நிலையில் இருந்த சூத்திரர்களான சிசுநாகரும் மகாபத்மநந்தரும் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடதக்கது.
மௌரிய பேரரசு
சந்திரகுப்த மௌரியர்:
- தனநந்தரை வென்று மகதத்தை கைப்பற்றினார்.
- அலெக்ஸாண்டரையும் அவரத்உ தளபதி செலுகஸ் நிகேடாரையும் வென்றார்.
- மெகஸ்தனிஸ் ( செலுகஸ் நிகேடாரின் தூதுவர்) பாடலிபுத்திரத்தில் தங்கி இந்தியாவை பற்றி இண்டிகா என்னும் புத்தகத்தை எழுதினார்.
- இவர் சமண சமயத்தை தழுவி துறவியாக மாறி சமண முனிவர் பத்திரபாகு என்பவருடன் சென்றார்.
- 2001 ஆம் ஆண்டு சந்திரகுப்த மௌரியரின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
- இந்திய வரலாற்றின் தலை சிறந்த மன்னர் இவர்.
அசோகர்
- சந்திரகுப்தருக்கு பின் அவரது மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- பிந்துசாரருக்கு பின் அவரது மகன் அசோகர் ஆட்சி பொறுப்பேற்றார் (273-236).
- கலிங்கத்துடன் போரிட்டு மௌரிய பேரரசுடன் இணைத்தார். ஆனால் இப்போருக்கு பின் போரிடுவதை கைவிட்டார்.
- திக் விஜயத்தை வெறுத்து தர்ம விஜயத்தை மேற்கொண்டார்.
- சாதி மத வேறுபாடற்ற சத்திரங்கள் மருத்துவமனைகள் ஆரம்பித்தார்.
- உயிர்பலியிடும் சடங்குகளுக்கு தடை, உயிர்வதை தடுப்பு, தண்டனை விதிகளில் மாற்றம் செய்தார்.
- வட்டார மொழிகளில் கல்வெட்டுகள் எழுத செய்தார்.
- தர்ம மகாமத்திரர்கள் ( மக்களுக்கு உதவும் சிறப்பு பணியாளர்கள் ) நியமிக்கப்பட்டனர்.
- இந்தியாவின் முதல் மக்கள் நல அரசு அசோகரது அரசு.
- அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார்.
- பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாட்டை நடத்தினார்.
- பௌத்த சமயத்தை பரப்ப இலங்கைக்கு அவரது மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையும் அனுப்பி வைத்தார்.
- சாஞ்சி, சாரநாத், லூம்பினி போன்றவை அசோகர் காலத்து கலையழகு மிகுந்த பௌத்த தூபிகள்.
- அசோகர் நிறுவிய கற்றூண்கள் பாரசீக சிற்பக்கலையின் தாக்கம் கொண்டவை. இதில் தாமரை மலர் தலைகீழாக இருக்கும்.
- இவரது காலத்து கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டது.
- வடமேற்கு எல்லை பகுதியில் கரோஸ்தி என்னும் மொழியில் எழுதப்பட்டது.
- ஆப்கானிஸ்தான் பகுதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.
மௌரிய ஆட்சி முறை
அசோக பேரரசு:
- வடக்கு- தட்சசீலம்
- தெற்கு- சுவர்ணகிரி
- மையம்- பாடலிபுத்திரம்
- கிழக்கு- தோசாலி
- மேற்கு- உஜ்ஜியினி
- அமைச்சர்கள் நியமணம் சாதி மத பேதமின்றி இருந்தது.
- மகாமாந்திரர்- மாநில அதிகாரி மற்றும் ஆளுநர் ஆவார்.
- அந்த மகாமாத்திரர்- பாதுகாப்பை கண்காணித்தோர்.
- நகரங்களில் உள்ளாட்சி அமைப்பு இருந்த்து.
- மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் பிருகத்திரதன் ஆவான். இவன் இவனது படைத்தலைவன் புஷ்யமித்ரசுங்கன் என்பவனால் கொல்லப்பட்டான்.
குஷானப் பேரரசு:
- மௌரியர்களுக்கு பின் இந்தியாவில் நிறுவப்பட்ட வலுமையான அரசு குஷான பேரரசு.
- யூச்சி என்னும் இனத்தின் உட்பிரிவு குஷானர்கள்.
- இந்தியாவின் வடமேற்கு பகுதியில் முதலாம் நூற்றாண்டில் குஷானப் பேரரசை முதலாம் காட்பிஸஸ் நிறுவினார்.
- அவருக்கு பின் இரண்டாம் காட்பிஸஸ் ( கி.பி 65- 75) ஆட்சி செய்தார்.
கனிஷ்கர்:
- இரண்டாம் காட்பிஸஸ் இறந்த பின் கனிஷ்கர் (கி.பி 78-101) குஷான அரியணையை கைப்பற்றினார்.
- குஷான வம்சத்தின் தலை சிறந்த மன்னர் இவர்.
- சாகசத்திரபர்களை அடிபணிய வைத்தார்.
- சீனாமீது படையெடுத்தார் முதல் முறை தளபதி பாஞ்ஞோ என்பவரிடம் தோற்றார். இரண்டாவது முறை அவரை வென்றார்.
- புருஷபுரம் என்னும் பெஷாவரை தலைநகராக அமைத்தார்.
- நான்காவது பௌத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.
- இந்த மாநாட்டில் மகாயான பௌத்த சமயப்பிரிவு தோன்றியது.
- மகாயான பௌத்த அறிஞர் அசுவகோஷர் வடமொழியில் புத்தசரிதம், சூத்திராலங்காரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
- வசுமித்திரர்- மகாவிபாசா என்ற சாத்திர நூலை எழுதியுள்ளார்.
- நாகார்ஜூனர் தத்துவ நூல்கள் எழுதுயுள்ளார்.
- மருத்துவ வல்லுனர் சரகர், கிரேக்க கட்டடக்கலை வல்லுனர் எஜிலாஸீம் இவரது அரசவையில் இருந்தனர்.
- இவர் இரண்டாம் அசோகர் என்று போற்றப்பட்டார்.
- இவரது காலத்தை அடிப்படையாக கொண்டு சக சகாப்தம் என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவானது.
குப்த பேரரசு:
- பாடலிபுத்திரத்தை தலைநகராக கொண்டு உருவான பேரரசு குப்த பேரரசு. குஷான பேரரசுக்கு பின் மகதத்தில் உருவானது.
- குப்த வம்சத்தின் முதல் சுகந்திர மன்னராக முதலாம் சந்திர குப்தர் (கி.பி 319- 335) குறிப்பிடப்படுகிறார்.
- குப்த யுகம் என்னும் காலக்கணகீடு புகுத்தப்பட்டது.
- சந்திர குப்தருக்கு பின் பட்டத்திற்கு வந்தவர் சமுத்திர குப்தர். இவரது படையெடுப்பு வெற்றிகளை அலகாபாத் கல்வெட்டு கூறுகிறது.
- அலகாபாத் கல்வெட்டை பொறித்தவர் சமுத்திர குப்தரின் அமைச்சர் அரிசேனர் ஆவார்.
- சமுத்திர குப்தருக்கு பின் இரண்டாம் சந்திர குப்தர் ஆட்சிக்கு வந்தார் (கி.பி 380-414).
- இராமாயணம், மகாபாரதம் மற்றும் 18 புராணங்கள் தொகுக்கப்பட்டன.
- பஞ்சதந்திர கதைகள் இயற்றப்பட்டன.
- சமஸ்கிருத மொழி ஆட்சி மொழியாக இருந்தது.
- கணித அறிஞர் ஆரியபட்டர் மற்றும் வானியியல் அறிஞர் வராகமிகிரர் குப்த காலத்தை சேர்ந்தவர்கள்.
- சரகர், சுசுருதர், தன்வந்திரி ஆகிய மருத்துவ அறிஞர்களும் குப்த காலத்தை சேர்ந்தவர்கள்.
- 1500 ஆண்டுகள் பழமையான மெகரௌலி இரும்புத்தூண் குப்தர்கள் காலத்தை சேர்ந்தது.
- குமாரகுப்தர் நாளந்தா பல்கலைகழகத்தை உருவாக்கினார்.
- குப்தர்கல் காலம் பொற்காலம் என கருதப்படுகிறது.
ஹர்ஷப் பேரரசு:
- வட இந்தியாவில் குப்த பேரரசுக்கு பின் மீண்டும் ஒரு பேரரசை உருவாக்கியவர் தானேஸ்வரத்தின் அரசர் ஹர்ஷவர்த்தனர் (கி.பி606-647).
- சசாங்கன் - ஹர்ஷரின் அண்ணனை கொன்றவன்.
- பாஸ்கரவர்மன் - ஹர்ஷருக்கு உதவி செய்த காமரூப் (அஸ்ஸாம்) மன்னன்.
- ராஜஶ்ரீ- ஹர்ஷரின் தங்கை
- தங்கையின் விருப்பத்திற்கு ஏற்ப கன்னோசிக்கு மன்னரானார். அதுவே அவரது தலைநகராகும்.
- இவரது தங்கை மற்றும் சீன அறிஞர் யுவான்சுவாங் ஆகியோரால் பௌத்த சமயத்தை தழுவினார்.
- கன்னோசி மற்றுன் பிரயாகை ஆகிய இடத்தில் சமய மாநாட்டை நடத்தினார்.
- நாளந்தா பல்கலைகழகம் இவரது காலத்தில் உலக புகழ் பெற்றது.
- சமஸ்கிருத மொழி அறிஞர் பாணர் இவரது அமைச்சராக இருந்தார்.
- பாணர்- ஹர்ஷ சரிதம் என்னும் நூலை எழுதினார்.
- ஹர்ஷர் வடமொழியில் புலமை பெற்றவர். இவர் நாகானந்தம், ரத்னாவளி, பிரியதர்சிகா என்னும் நூல்களை எழுதியுள்ளார்.
- சி-யு-கி என்பது யுவான்சுவாங் எழுதிய பயண நூல்.
- வட இந்தியாவின் கடைசி பேரரசு ஹர்ஷ பேரரசு ஆகும்.
Hi mam please add current affairs, Tamil, geography, Indian polity, economics, physics, chemistry, zoology, botany for upcoming group 4 exam mam please send me mam as soon as possible mam
பதிலளிநீக்கு