முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்

முதல் பருவம்


புவியியல்
                                பூமியும் சூரியக்குடும்பமும்
கோள்கள்:

  • புதன், வெள்ளி, செவ்வாய்,வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
  • இவை மின்னுவது இல்லை
  • புதன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களை சூரிய உதயத்திற்கு சற்று முன்பும் மாலையில் சூரியன் மறைந்தபின்பும் தெரியும்.
  • வெள்ளி கோள் சூரிய உதயத்திற்கு சற்று முன்பு தெரிந்தால் அது விடிவெள்ளி எனப்படும்.
  • செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களும் இரவில் தெரியும். இவை மேற்கில், கிழக்கில் அல்லது தலைக்கு மேல் தெரியும்.
  • யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களையும் தொலைநோக்கியால் மட்டுமே காணமுடியும்.
சூரியக்குடும்பம்:


  • சூரியக்குடும்பம் எட்டுக் கோள்களை கொண்டது. இவை சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.
  • இந்த எட்டு கோள்களும் திடக்கோள்கள் மற்றும் வாயுக்கோள்கள் என இரண்டு வகையாக பிரிக்கபட்டு உள்ளன.
  • புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடக்கோள்கள் ஆகும்.
  • வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களும் வாயுக்கோள்கள் ஆகும்.
  • இவை தவிர பல குள்ளக்கோள்களும் மற்றும் குறுங்கோள்களும் உள்ளன.
  • புளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக் மற்றும் ஹவ்மீயே முதலியவை 2006ஆம் ஆண்டு குள்ளக்கோள்கள்( சிறு கோள்கள் )  என புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் அறிஞர்கள் வைணுபாப்பு ( வானவியல் அறிஞர் ), சாராபாய் ( அணுசக்தித் துறையின் தந்தை ) மற்றும் இராமானுஜம் ( கணித மேதை) ஆகியோரின் பெயரில் குறுங்கோள்கள் உள்ளன.
  • சில கோள்களுக்கு துணைக்கோள்கள் உள்ளது சில கோள்களுக்கு துணைக்கோள்கள் இல்லை. 
                          புதன் - 0
                          வெள்ளி - 0
                          பூமி - 1 ( சந்திரன் )
                         செவ்வாய் - 2
                         வியாழன் - 63
                         சனி - 60
                         யுரேனஸ் - 27
                        நெப்டியூன் - 13
  • சந்திரன் ஒரு கோள் அல்ல. இது ஒரு துணைக்கோளாகும். பூமியை சுற்றி வருகிறது.
  • சந்திரன் தன்னை தானே சுற்ற 27.3 நாட்கள் எடுக்கிறது அதே போல் பூமியை சுற்றவும் 27.3 நாட்கள் எடுக்கிறது. ஆகையால் நம்மால் சந்திரனின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும்.
  • லூனா 3 என்ற செயற்கைக்கோள் 1959ஆம் ஆண்டு சந்திரனின் மறுபக்கத்தை  முதல் முதலில் படம் எடுத்தது. 
  • பூமியில் இருந்து சந்திரன் சுமார் 3,84,401கி.மீ தொலைவில் உள்ளது.
  • சந்திரனில் வளிமண்டலம் இல்லை. நீர் திரவ நிலையில் இல்லை. மலைகள், பள்ளத்தாக்குகள் உள்ளது. ஈர பதம் உள்ளது.
  • கிண்ணக்குழிகள் சந்திரனின் சிறப்பு அம்சம் ஆகும். இவை எரிமலை வெடிப்புகளாலும் விண்கற்களின் மோதலாலும் ஏற்பட்டவை.
  • சனிக்கோளின் வளையம் சிறப்புடையது. இது நுண்கற்கள், தூசு மற்றும் பனியின் தொகுதி.
  • வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களுக்கும் வளையங்கள் உண்டு. 
  • அண்டம்- பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதி.
  • பேரண்டம் - பல கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதி.
  • நாம் வாழும் அண்டம் பால்வெளி அண்டம் ஆகும். இதற்கு "ஆகாய கங்கை" என மற்றொரு பெயரும் உண்டு.
  • நாம் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்பம் பூமியில் உள்ளதால் இது உயிர்க்கோளம் எனப்படுகிறது.                                                                                                       

வரலாறு
                    
                  வரலாற்றுக்கு முற்பட்ட காலம்


  • பழைய கற்காலம் ( palaeolithic age ) - 10,000 ஆண்டுகளுக்கு முன்.
  • புதிய கற்காலம் ( neolithic age ) - கி.மு 10,000 முதல் கி.மு 4000 வரை.
  • செம்பு கற்காலம் ( chalcolithic age ) - கி.மு 3000 முதல் கி.மு 1500 வரை.
  • இரும்பு கற்காலம் ( iron age ) - கி.மு 1000 முதல் கி.மு 600 வரை.

 பழைய கற்காலம் ( palaeolithic age ) 

  • மனிதர்கள் நிலையான ஒரு இடத்தில் வாழவில்லை
  • குகை, மரக்கிளை, மரப்பொந்து இவர்களின் வாழ்விடமாக இருந்தது.
  • நெருப்பு கண்டுபிடிக்கபட்டது.
  • வேட்டையாட கற்கள், எலும்புகள், மரக்கொம்புகள், விலங்குகளின் கொம்புகள் போன்றவற்றை ஆயுதமாக பயன்படுத்தினான்.
  • பெண்களும் வேட்டையாடுதலில் பங்கு கொண்டனர்.
  • பழைய கற்கால கருவிகள் கிடைத்த இடங்கள்,

                   மத்திய பிரதேசம்- சோன் ஆற்றுப்படுக்கை, பிம்பேட்கா, ம்ஹேஸ்வா
                   ராஜஸ்தான் -லூனி ஆற்றுச் சமவெளி
                  கர்நாடகம் - பாகல்கோட்
                 ஆந்திரப்பிரதேசம் - கர்னூல் குகைகள், ரேணிகுண்டா
                 தமிழ்நாடு - வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர்.

புதிய கற்காலம் ( neolithic age )

  • உணவு உற்பத்தி தொடங்கியது.
  • கால்நடைகளை வளர்க்க தொடங்கினான், அவனால் முதலில் பழக்கபட்ட விலங்கு நாய்.
  • வண்டி சக்கரம் உருவாக்கப்பட்டது.
  • உலோகத்தை பயன்படுத்த தொடங்கினான். முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு.
  • மண்குடிசைகள் அமைத்து குடியிருப்புகள் உருவாக்கி வாழ தொடங்கினான். ஒரே இடத்தில் தங்கினான்.
  • இறந்தோரை புதைக்கும் பழக்கம் இருந்த்து. அவர்களோடு அவர்கள் பழக்கிய நாய் போன்ற விலங்குகளை சேர்த்து புதைத்தான்.
  • புதிய கற்கால கருவிகள் கிடைத்த இடங்கள், திருநெல்வேலி, தன்றிகுடி, புதுகோட்டை, திருச்சிராபள்ளி, சேலம்.
செம்பு கற்காலம் ( chalcolithic age )
  • செம்பு உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
  • செம்பினால் கருவிகளும் ஆயுதங்களும் செய்தனர்.
  • ஹரப்பா நகர நாகரிகம் இக்காலத்தை சேர்ந்தது.
இரும்பு காலம் ( iron age )
  • இரும்பு பயன்பாட்டிற்கு வந்தது.
  • இரும்பினால் கருவிகலும் வீட்டுச்சாமான்களும் செய்தனர்.
  • உலோகங்களை உருக்கி கருவிகள் செய்ய தெரிந்து வைத்திருந்தனர்.
  • கற்பனை வளம் நிறைந்தவர்களாக இருந்தனர்.
                     சிந்துவெளி நாகரிகம்
  • ஹரப்பா நாகரிகம் என்பதுவே சிந்துவெளி நாகரிகம் என்று அழைக்கப்பட்டது.
  • இந்தியாவின் மிக தொன்மையான நாகரிகம்.
  • ஆங்கிலேயர்களால் 1856ஆம் ஆண்டு சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிகரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1921ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சி இங்கே மேற்கொள்ளப்பட்டது.
  • சிந்து மொழியில் "ஹரப்பா" என்றால் "புதையுண்ட நகரம்" என்று பொருள்படும்.
  • சுமார் 4700 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகம்.
  • மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல் போன்ற இடங்களிலும் இதே நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இவர்கள் பசுபதி என்னும் கடவுளை வணங்கினர்.
  • "மொகஞ்சதாரோ" என்ற சொலுக்கு சிந்து மொழியில் "இடுகாட்டு மேடு" என்று பெயர்.
  • சித்திர எழுத்துகள் பயன்படுத்தப்பட்டது.
  • சிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா ( terracotta ) என்னும் சுடுமண்பாண்டங்கள் செய்வதில் திறமைவாய்தவர்களாக இருந்தனர்.
  • சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட பெருங்குளம் இங்கே கண்டுபிடிக்கப்பட்டது.
  • செம்பையும் வெண்கலத்தையும் பயன்படுத்தினர்.
  • தங்கம் மற்றும் வெள்ளி அணிகலன் செய்ய பயன்படுத்தபட்டது.
  • விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தது. கோதுமை, பார்லி போன்றவற்றை விளைவித்தனர்.
                                                       பண்டைத் தமிழகம்
  • தென்னாட்டில் பேசப்படும் மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகும்.
  • திருப்பதிக்கு தெற்கில் தமிழ் மொழி பேசப்படுகிறது.
  • ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் தென்னாட்டின் பெரும்பகுதி "சென்னை மாகாணம்"  எனப்பட்டது.
  • 1967-ல் முதலமச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களால் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது.
  • பழங்காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். இவர்கள் மூவேந்தர்கள் என போற்றப்பட்டனர்.
  • தமிழகத்தின் 
                     மேற்கு பகுதி - சேரர்கள் ஆட்சி
                     வடக்கு பகுதி - சோழர்கள் ஆட்சி
                     தெற்கு பகுதி - பாண்டியர்கள் ஆட்சி
  • வரலாற்று காலத்திற்கு முன்னர், இப்போதைய இந்துமாக்கடல் பகுதி மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.
  • இங்கு பஃறுளியாறு ஒடியது.
  • இந்த நிலப்பரப்பை குமரி கண்டம் என்று கூறுவர்.
  • இங்கு பாண்டியர்கள் ஆட்சி நடந்தது.
  • பாண்டியர்களின் தலைநகர் தென்மதுரையாக இருந்தது. இங்குதான் தலைசங்கம் கூடியது. தென்மதுரை கடல் சீற்றத்தால் முழ்கியது.
  • பின்னர் கபாடபுரம் தலைநகராக மாற்றப்பட்டது. இங்குதான் இடச்சங்கம் கூடியது. இதுவும் கடலில் முழ்கியது.
  • இறுதியாக தற்போதைய மதுரை மாநகர் தலைநகராக அமைக்கபட்டது. இங்கு கடைச்சங்கம் கூடியது. இதுவே "கூடல்" எனப்பட்டது. 
  • லெமூரியாக் கண்டம் ( ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்த நிலப்பரப்பு ) இங்கே "லெமூர்" என்னும் குரங்கின மக்கள் வாழ்ந்தனர்.
  • எட்டுதொகை, பத்துபாட்டு (பண்டைத் தமிழ் பண்பாடு, ஆட்சிமுறை, பழக்க வழக்கம், நாகரிகம் பற்றி அறிய உதவிடும்).
  • தொல்காப்பியம் கடைச்சங்க காலத்திற்கு முன்னர் தோன்றியது.
  • துறைமுகங்கள் ( கொற்கை, முசிறி, தொண்டி, வஞ்சி, புகார் என்னும் காவேரிபூம்பட்டினம்).
  • உழவு தொழிலும் நெசவு தொழிலும் உயர்ந்த தொழிலாக மதிக்கபட்டது.
சேரர்
  • ஆட்சி பகுதி தற்போதைய கேரளமும் வடமேற்கு தமிழகமும்.
  • புகழ் பெற்ற மன்னர்கள் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், சிலம்பு புகழ் சேரம் செங்குட்டுவன்.
  • தலைநகர் வஞ்சி (கரூர்).
  • துறைமுகம் தொண்டி மற்றும் முசிறி.
  • கொடி- வில் கொடி.
சோழர்
  • ஆட்சி பகுதி திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் தென்னாற்காடு.
  • புகழ் பெற்ற மன்னர்கள் கரிகாற்சோழன் மற்றும் கிள்ளிவளவன்.
  • கரிகாற்சோழன் கல்லணையை கட்டினான்.
  • தலைநகர் உறையூர் ஆகும்.
  • துறைமுகம் காவிரிபூம்பட்டினம் ஆகும்.
  • சின்னம் புலிக்கொடி
  • இடைக்கால இராசராச சோழன், இராசேந்திர சோழன் புகழ் மிக்கவர்கள். வடக்கில் ஜாவகம், கடாரம் முதலிய தேசத்தை வென்றனர்.  
பாண்டியர்
  • ஆட்சி பகுதி கன்னியாகுமரி முதல் மதுரை வரை.
  • புகழ் பெற்ற மன்னர்கள் 
                         பாண்டியன் முடத்திருமாறன்.
                         ஏழு குறுநில மன்னர்களை ஒருசேர வென்ற தலையாலங்கானத்து  செருவென்ற நெடுஞ்செழியன்.
                        சிலப்பதிகார புகழ் பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • தலைநகர் மதுரை ஆகும்.
  • துறைமுகம் கொற்கை ( தூத்துக்குடி) ஆகும்.
  • சின்னம் மீன் கொடி ஆகும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:   பாபர்( 1526-1530)     | உமாயூன்1530-40, 1555-56)     | அக்பர்(1556-1605)     | ஜஹாங்கீர்( 1605-1627)     | ஷாஜகான்( 1628-1658)     | ஔரங்கசீப்( 1658-1707) பாபர் பிறப்பு: 1483 இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர். தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்) தாய்: செங்கிஸ்கான் இனம் 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார் 1526- முதல் பானிபட் போர் 1527- கான்வா போர் - மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார் 1528- சந்தேரி போர் - மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார் 1529- காக்ரா போர் - முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். 1530- மரணித்தார். இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி உமாயூன்: பிறப்பு- 1508 உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள். 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார். 1530ல் ஆட்சி பொறப்பேற்றார். சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது. 1539 - சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார். 1540 - கன்னோசி போரிலும் தோற்றார். 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோட...