முதல் பருவம்
புவியியல்
பூமியும் சூரியக்குடும்பமும்
கோள்கள்:
வெள்ளி - 0
பூமி - 1 ( சந்திரன் )
செவ்வாய் - 2
வியாழன் - 63
சனி - 60
யுரேனஸ் - 27
நெப்டியூன் - 13
வரலாறு
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
பழைய கற்காலம் ( palaeolithic age )
மத்திய பிரதேசம்- சோன் ஆற்றுப்படுக்கை, பிம்பேட்கா, ம்ஹேஸ்வா
ராஜஸ்தான் -லூனி ஆற்றுச் சமவெளி
கர்நாடகம் - பாகல்கோட்
ஆந்திரப்பிரதேசம் - கர்னூல் குகைகள், ரேணிகுண்டா
தமிழ்நாடு - வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர்.
புதிய கற்காலம் ( neolithic age )
புவியியல்
பூமியும் சூரியக்குடும்பமும்
கோள்கள்:
- புதன், வெள்ளி, செவ்வாய்,வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
- இவை மின்னுவது இல்லை
- புதன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களை சூரிய உதயத்திற்கு சற்று முன்பும் மாலையில் சூரியன் மறைந்தபின்பும் தெரியும்.
- வெள்ளி கோள் சூரிய உதயத்திற்கு சற்று முன்பு தெரிந்தால் அது விடிவெள்ளி எனப்படும்.
- செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களும் இரவில் தெரியும். இவை மேற்கில், கிழக்கில் அல்லது தலைக்கு மேல் தெரியும்.
- யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களையும் தொலைநோக்கியால் மட்டுமே காணமுடியும்.
- சூரியக்குடும்பம் எட்டுக் கோள்களை கொண்டது. இவை சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.
- இந்த எட்டு கோள்களும் திடக்கோள்கள் மற்றும் வாயுக்கோள்கள் என இரண்டு வகையாக பிரிக்கபட்டு உள்ளன.
- புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடக்கோள்கள் ஆகும்.
- வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களும் வாயுக்கோள்கள் ஆகும்.
- இவை தவிர பல குள்ளக்கோள்களும் மற்றும் குறுங்கோள்களும் உள்ளன.
- புளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக் மற்றும் ஹவ்மீயே முதலியவை 2006ஆம் ஆண்டு குள்ளக்கோள்கள்( சிறு கோள்கள் ) என புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
- இந்தியாவின் அறிஞர்கள் வைணுபாப்பு ( வானவியல் அறிஞர் ), சாராபாய் ( அணுசக்தித் துறையின் தந்தை ) மற்றும் இராமானுஜம் ( கணித மேதை) ஆகியோரின் பெயரில் குறுங்கோள்கள் உள்ளன.
- சில கோள்களுக்கு துணைக்கோள்கள் உள்ளது சில கோள்களுக்கு துணைக்கோள்கள் இல்லை.
வெள்ளி - 0
பூமி - 1 ( சந்திரன் )
செவ்வாய் - 2
வியாழன் - 63
சனி - 60
யுரேனஸ் - 27
நெப்டியூன் - 13
- சந்திரன் ஒரு கோள் அல்ல. இது ஒரு துணைக்கோளாகும். பூமியை சுற்றி வருகிறது.
- சந்திரன் தன்னை தானே சுற்ற 27.3 நாட்கள் எடுக்கிறது அதே போல் பூமியை சுற்றவும் 27.3 நாட்கள் எடுக்கிறது. ஆகையால் நம்மால் சந்திரனின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும்.
- லூனா 3 என்ற செயற்கைக்கோள் 1959ஆம் ஆண்டு சந்திரனின் மறுபக்கத்தை முதல் முதலில் படம் எடுத்தது.
- பூமியில் இருந்து சந்திரன் சுமார் 3,84,401கி.மீ தொலைவில் உள்ளது.
- சந்திரனில் வளிமண்டலம் இல்லை. நீர் திரவ நிலையில் இல்லை. மலைகள், பள்ளத்தாக்குகள் உள்ளது. ஈர பதம் உள்ளது.
- கிண்ணக்குழிகள் சந்திரனின் சிறப்பு அம்சம் ஆகும். இவை எரிமலை வெடிப்புகளாலும் விண்கற்களின் மோதலாலும் ஏற்பட்டவை.
- சனிக்கோளின் வளையம் சிறப்புடையது. இது நுண்கற்கள், தூசு மற்றும் பனியின் தொகுதி.
- வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களுக்கும் வளையங்கள் உண்டு.
- அண்டம்- பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதி.
- பேரண்டம் - பல கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதி.
- நாம் வாழும் அண்டம் பால்வெளி அண்டம் ஆகும். இதற்கு "ஆகாய கங்கை" என மற்றொரு பெயரும் உண்டு.
- நாம் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்பம் பூமியில் உள்ளதால் இது உயிர்க்கோளம் எனப்படுகிறது.
வரலாறு
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
- பழைய கற்காலம் ( palaeolithic age ) - 10,000 ஆண்டுகளுக்கு முன்.
- புதிய கற்காலம் ( neolithic age ) - கி.மு 10,000 முதல் கி.மு 4000 வரை.
- செம்பு கற்காலம் ( chalcolithic age ) - கி.மு 3000 முதல் கி.மு 1500 வரை.
- இரும்பு கற்காலம் ( iron age ) - கி.மு 1000 முதல் கி.மு 600 வரை.
பழைய கற்காலம் ( palaeolithic age )
- மனிதர்கள் நிலையான ஒரு இடத்தில் வாழவில்லை
- குகை, மரக்கிளை, மரப்பொந்து இவர்களின் வாழ்விடமாக இருந்தது.
- நெருப்பு கண்டுபிடிக்கபட்டது.
- வேட்டையாட கற்கள், எலும்புகள், மரக்கொம்புகள், விலங்குகளின் கொம்புகள் போன்றவற்றை ஆயுதமாக பயன்படுத்தினான்.
- பெண்களும் வேட்டையாடுதலில் பங்கு கொண்டனர்.
- பழைய கற்கால கருவிகள் கிடைத்த இடங்கள்,
மத்திய பிரதேசம்- சோன் ஆற்றுப்படுக்கை, பிம்பேட்கா, ம்ஹேஸ்வா
ராஜஸ்தான் -லூனி ஆற்றுச் சமவெளி
கர்நாடகம் - பாகல்கோட்
ஆந்திரப்பிரதேசம் - கர்னூல் குகைகள், ரேணிகுண்டா
தமிழ்நாடு - வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர்.
புதிய கற்காலம் ( neolithic age )
- உணவு உற்பத்தி தொடங்கியது.
- கால்நடைகளை வளர்க்க தொடங்கினான், அவனால் முதலில் பழக்கபட்ட விலங்கு நாய்.
- வண்டி சக்கரம் உருவாக்கப்பட்டது.
- உலோகத்தை பயன்படுத்த தொடங்கினான். முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு.
- மண்குடிசைகள் அமைத்து குடியிருப்புகள் உருவாக்கி வாழ தொடங்கினான். ஒரே இடத்தில் தங்கினான்.
- இறந்தோரை புதைக்கும் பழக்கம் இருந்த்து. அவர்களோடு அவர்கள் பழக்கிய நாய் போன்ற விலங்குகளை சேர்த்து புதைத்தான்.
- புதிய கற்கால கருவிகள் கிடைத்த இடங்கள், திருநெல்வேலி, தன்றிகுடி, புதுகோட்டை, திருச்சிராபள்ளி, சேலம்.
செம்பு கற்காலம் ( chalcolithic age )
- செம்பு உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
- செம்பினால் கருவிகளும் ஆயுதங்களும் செய்தனர்.
- ஹரப்பா நகர நாகரிகம் இக்காலத்தை சேர்ந்தது.
இரும்பு காலம் ( iron age )
- இரும்பு பயன்பாட்டிற்கு வந்தது.
- இரும்பினால் கருவிகலும் வீட்டுச்சாமான்களும் செய்தனர்.
- உலோகங்களை உருக்கி கருவிகள் செய்ய தெரிந்து வைத்திருந்தனர்.
- கற்பனை வளம் நிறைந்தவர்களாக இருந்தனர்.
சிந்துவெளி நாகரிகம்
- ஹரப்பா நாகரிகம் என்பதுவே சிந்துவெளி நாகரிகம் என்று அழைக்கப்பட்டது.
- இந்தியாவின் மிக தொன்மையான நாகரிகம்.
- ஆங்கிலேயர்களால் 1856ஆம் ஆண்டு சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிகரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1921ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சி இங்கே மேற்கொள்ளப்பட்டது.
- சிந்து மொழியில் "ஹரப்பா" என்றால் "புதையுண்ட நகரம்" என்று பொருள்படும்.
- சுமார் 4700 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகம்.
- மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல் போன்ற இடங்களிலும் இதே நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.
- இவர்கள் பசுபதி என்னும் கடவுளை வணங்கினர்.
- "மொகஞ்சதாரோ" என்ற சொலுக்கு சிந்து மொழியில் "இடுகாட்டு மேடு" என்று பெயர்.
- சித்திர எழுத்துகள் பயன்படுத்தப்பட்டது.
- சிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா ( terracotta ) என்னும் சுடுமண்பாண்டங்கள் செய்வதில் திறமைவாய்தவர்களாக இருந்தனர்.
- சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட பெருங்குளம் இங்கே கண்டுபிடிக்கப்பட்டது.
- செம்பையும் வெண்கலத்தையும் பயன்படுத்தினர்.
- தங்கம் மற்றும் வெள்ளி அணிகலன் செய்ய பயன்படுத்தபட்டது.
- விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தது. கோதுமை, பார்லி போன்றவற்றை விளைவித்தனர்.
பண்டைத் தமிழகம்
- தென்னாட்டில் பேசப்படும் மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகும்.
- திருப்பதிக்கு தெற்கில் தமிழ் மொழி பேசப்படுகிறது.
- ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் தென்னாட்டின் பெரும்பகுதி "சென்னை மாகாணம்" எனப்பட்டது.
- 1967-ல் முதலமச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களால் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது.
- பழங்காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். இவர்கள் மூவேந்தர்கள் என போற்றப்பட்டனர்.
- தமிழகத்தின்
மேற்கு பகுதி - சேரர்கள் ஆட்சி
வடக்கு பகுதி - சோழர்கள் ஆட்சி
தெற்கு பகுதி - பாண்டியர்கள் ஆட்சி
- வரலாற்று காலத்திற்கு முன்னர், இப்போதைய இந்துமாக்கடல் பகுதி மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.
- இங்கு பஃறுளியாறு ஒடியது.
- இந்த நிலப்பரப்பை குமரி கண்டம் என்று கூறுவர்.
- இங்கு பாண்டியர்கள் ஆட்சி நடந்தது.
- பாண்டியர்களின் தலைநகர் தென்மதுரையாக இருந்தது. இங்குதான் தலைசங்கம் கூடியது. தென்மதுரை கடல் சீற்றத்தால் முழ்கியது.
- பின்னர் கபாடபுரம் தலைநகராக மாற்றப்பட்டது. இங்குதான் இடச்சங்கம் கூடியது. இதுவும் கடலில் முழ்கியது.
- இறுதியாக தற்போதைய மதுரை மாநகர் தலைநகராக அமைக்கபட்டது. இங்கு கடைச்சங்கம் கூடியது. இதுவே "கூடல்" எனப்பட்டது.
- லெமூரியாக் கண்டம் ( ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்த நிலப்பரப்பு ) இங்கே "லெமூர்" என்னும் குரங்கின மக்கள் வாழ்ந்தனர்.
- எட்டுதொகை, பத்துபாட்டு (பண்டைத் தமிழ் பண்பாடு, ஆட்சிமுறை, பழக்க வழக்கம், நாகரிகம் பற்றி அறிய உதவிடும்).
- தொல்காப்பியம் கடைச்சங்க காலத்திற்கு முன்னர் தோன்றியது.
- துறைமுகங்கள் ( கொற்கை, முசிறி, தொண்டி, வஞ்சி, புகார் என்னும் காவேரிபூம்பட்டினம்).
- உழவு தொழிலும் நெசவு தொழிலும் உயர்ந்த தொழிலாக மதிக்கபட்டது.
சேரர்
- ஆட்சி பகுதி தற்போதைய கேரளமும் வடமேற்கு தமிழகமும்.
- புகழ் பெற்ற மன்னர்கள் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், சிலம்பு புகழ் சேரம் செங்குட்டுவன்.
- தலைநகர் வஞ்சி (கரூர்).
- துறைமுகம் தொண்டி மற்றும் முசிறி.
- கொடி- வில் கொடி.
சோழர்
- ஆட்சி பகுதி திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் தென்னாற்காடு.
- புகழ் பெற்ற மன்னர்கள் கரிகாற்சோழன் மற்றும் கிள்ளிவளவன்.
- கரிகாற்சோழன் கல்லணையை கட்டினான்.
- தலைநகர் உறையூர் ஆகும்.
- துறைமுகம் காவிரிபூம்பட்டினம் ஆகும்.
- சின்னம் புலிக்கொடி
- இடைக்கால இராசராச சோழன், இராசேந்திர சோழன் புகழ் மிக்கவர்கள். வடக்கில் ஜாவகம், கடாரம் முதலிய தேசத்தை வென்றனர்.
பாண்டியர்
- ஆட்சி பகுதி கன்னியாகுமரி முதல் மதுரை வரை.
- புகழ் பெற்ற மன்னர்கள்
பாண்டியன் முடத்திருமாறன்.
ஏழு குறுநில மன்னர்களை ஒருசேர வென்ற தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்.
சிலப்பதிகார புகழ் பாண்டியன் நெடுஞ்செழியன்.
- தலைநகர் மதுரை ஆகும்.
- துறைமுகம் கொற்கை ( தூத்துக்குடி) ஆகும்.
- சின்னம் மீன் கொடி ஆகும்.
thanks for post. good work and keep posting
பதிலளிநீக்கு