இரண்டாம் பருவம்.
புவியியல்
சுழன்றும் சுற்றியும் வரும் பூமி
- பல இயக்கங்களை கொண்டது பூமி
- தற்சுழற்சி ( rotation ) மற்றும் சூரியனை (revolution) சுற்றி வருதல் ஆகிய இரண்டு இயக்கங்கள் முக்கியமானவை.
தற்சுழற்சி
- பூமி தன்னை தானே சுற்ற 23 மணி 56 நிமிடம் எடுத்து கொள்கிறது.
- இரவு-பகல் மாற்றம் பூமி தன்னை தானே சுற்றுவதால் ஏற்படுகிறது.
- ஒரே நேரத்தில் பகல் அல்லது இரவு எல்லா இடத்திலும் ஏற்படாது.
- ஆரியபட்டர்- இந்திய வானவியல் அறிஞர்-பூமி தன்னை தானே சுற்றுகிறது என்று விளக்கினார்.
- பூமி சூரியனை சுற்றி வர சுமார் 365.24 நாட்கள் எடுகிறது.
- பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக உள்ளது.இதனால்தான் பருவ கால மாற்றம் ஏற்படுகிறது.
- லீப் ஆண்டில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளது
சூரியனை சுற்றி வருதல்
- சூரியன் எப்பொழுதும் சரியாக கிழக்குதிசையில் உதிக்காது. பெரும்பாலும் தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் உதிக்கும்.
- டிசம்பர் 22 அன்று அதிகபட்ச தென்கிழக்கு புள்ளியில் உதிக்கும். பின்னர் வடக்கு நோக்கி நகரும் இதுவே வட ஒட்டம் (உத்ராயணம்) எனப்படும்.
- ஜூன் 21 அன்று அதிகபட்ச வடகிழக்கு திசையில் உதிக்கும். பின்னர் தெற்கு நோக்கி நகரும் இதுவே தென் ஒட்டம் (தட்சிணாயணம்) எனப்படும்.
- மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே சம இரவு - சம பகல்( equinox) இருக்கும்.
- பொதுவாக கோடைகாலம், வசந்தகாலம், குளிர்காலம் மற்றும் இலையுதிர்காலம் என நான்கு பருவங்கள் உள்ளன.
- தமிழ் இலக்கியம் இளவேனில், முதுவேனில், கார், குளிர், பின்பனி மற்றும் முன்பனி என ஆறு பருவகாலங்களை குறிப்பிடுகின்றன.
வரலாறு
வேதகாலம்
- ஆரியர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவிற்கு வந்தனர்.
- மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இவர்கள் இந்தியாவிற்குள் வந்தனர்.
- இவர்கள் குடியேறிய பகுதி ஆரிய வர்த்தம் எனப்பட்டது.
- இவர்கள் கால்நடைகளை கொண்டு வாழ்வு நடத்தினர்.
- இக்காலக்கட்டம் வேதகாலம் எனப்படுகிறது. முற்பட்ட வேதகாலம், பிற்பட்ட வேதகாலம் என இரண்டாக பிரிக்கபடுகிறது.
முற்பட்ட வேதகாலம் அல்லது ரிக் வேதகாலம் (கிமு 1500-கிமு 1000)
- இக்காலக்கட்டத்தில் ஆரியர்கள் பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் வாழ்ந்தனர்.
- சப்தசிந்து- ஏழு நதிகள் பாயும் நிலம்.
- ரிக் வேதம்- வேதகால மக்கள் வாழ்க்கை முறைகளை அறிய உதவுகிறது.
- ஆரியர்களின் சமூக சமுதாய அமைப்பு, குடும்பம்-கிராமம்-விஸ்-ஜனா-ஜனபதா.
அரசியல்:
- பல குடும்பங்கள் இணைந்தது கிராமம். அதன் தலைவர் கிராமணி எனப்பட்டார்.
- பல கிராமங்கள் இணைந்து விசு(விஸ்) எனப்பட்டது. இதன் தலைவர் விசுவபதி எனப்பட்டார்.
- பெரிய ஆட்சி அமைப்பு- ஜனா- இதன் தலைவர் ராஜன்( அரசன், பிரஜாபதி)
- மகாஜனபதம்- பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு.
- சபா- முதியோர் அவை
- சமிதி- ஊர்மக்களின் பிரதிநிதிகளை கொண்ட அவை.
- சேனானி- படைத் தலைவர்
அரசரின் கடமைகள்:
- அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து காத்தல், நாட்டின் எல்லையை விரிவுப்படுத்தல் மற்றும் நீதியை நிலைநாட்டல்.
சமூக வாழ்க்கை
- பெண் கல்வி அனுமதிக்கப்பட்டது.
- பெண் கவிஞர்கள்- விஸ்வவாரா, அபலா, கோசா, லோபமுத்ரா
- தொடக்கத்தில் சாதிப்பிரிவுகள் இல்லை.
- விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பொருளாதார நிலை:
- முக்கிய தொழில்- கால்நடை வளர்ப்பு, வேளாண்மை
- பிற தொழில்கள் - தச்சு வேலை, நூல் நூற்றல், இரும்பு கருவிகள் செய்தல்.
- பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்தது.
- நிஷ்கா- தங்க அலகுகள்
உணவு:
- சோம, சுரா- பானங்கள்.
- கோதுமை மற்றும் பார்லி முக்கிய தானியங்கள்.
சமயம்:
- சூரியன், நெருப்பு, காற்று, வானம், மரங்கள் போன்றவற்றை வணங்கினர்.
- இந்திரன், வருணன், அக்னி, எமன் ஆகிய கடவுள்களையும் வணங்கினர்.
- கோயில்களோ சிலை வழிபாடோ இல்லை.
- அஸ்வமேதா, இராஜசூயம், வாஜபேயம் ஆகிய யாகங்கள் நடத்தப்பட்டன.
பிற்பட்ட வேதகாலம் ( கிமு.1000- கிமு 600)
- சாம, யாஜுர், அதர்வண வேதங்கள் தோன்றின.
- கிழக்கு பகுதியில் பரவி இருந்தனர்.
அரசியல் நிலை:
- அரசாட்சி பகுதி- கங்கை சமவெளி.
- கோசலம், பாஞ்சாலம், விதேகம், குரு, மகதம், காசி, அவந்தி போன்ற அரசுகள் தோன்றின.
- அரச பதவி பரம்பரை பதவியானது.
- இராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்த நடத்தப்பட்டது.
- சபா, சமிதி போன்ற அமைப்புகள் வலுவிழந்தன.
பொருளாதார நிலை:
- இரும்பு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.
- கால்நடைவளர்ப்பு பெருகியது.
- நிஷ்கா, சுவர்ணா, சதமானா முதலான தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
- சாதி அமைப்புமுறை தோன்றியது.
பெண்கள் நிலை:
- சொத்துரிமை, அரசியல் உரிமை இல்லை.
- குழந்தை திருமணம் வழக்கத்தில் இருந்தது.
- உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
கல்வி:
- குருகுல கல்விமுறை வழக்கத்தில் இருந்தது.
- கார்கி, மைத்ரேயி கல்வியில் சிறந்த பெண்கள்.
- தனுர்வேதம் எனப்படும் போர்கலை கற்பிக்கப்பட்டது.
சமயம்:
- பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் போன்ற கடவுளை வழிப்பட்டனர்.
- உயிர்பலியிடுவது நடைமுறையில் இருந்தது.
சமணமும் பௌத்தமும்
- கிமு.6 ஆம் நூற்றாண்டு சிந்தனை புரட்சி காலமாகும்.
- சமண மதமும் பௌத்த மதமும் தோன்றின.
- சமண சமயம்- வர்த்தமான மகாவீரர்.
- பௌத்த சமயம்- கௌதமபுத்தர்.
சமண சமயம்:
- சமண சமயத்தினர் 24 தீர்த்தங்கரர்களை வழிப்படுகின்றனர்.
- ஆதிநாதர்( ரிஷபதேவர் )- முதல் தீர்த்தங்கரர்.
மகாவீரர்:
- வர்ததமான மகாவீரர்- 24வது தீர்த்தங்கரர் ( சமண சமயத்திற்கு உறுதியான ஒரு அமைப்பை தந்தவர்.)
- இவரது காலம் கிமு.534 முதல் கிமு.462 வரை.
- பிறப்பு- குந்தக் கிராமம், வைசாலி நகர், இன்றைய பீகார் மாநிலம்.
- பெற்றோர்- சித்தார்த்தர், திரிசலை
- மனைவி- யசோதா, மகள்- அனோஜா பிரியதர்சனா.
- 30வது வயதில் இல்வாழ்க்கை துறந்து 12 வருடங்கள் தியானம் செய்தார்.
- ஜீனர் ( வெற்றியாளர் ), மகாவீரர் என்னும் சிறப்பு பெயர்களை பெற்றார்.
- கொல்லாமை கொள்கையை பின்பற்றினர்.
- சமண சமயம் உயிரிரக்கம் என்னும் அகிம்சையை வலியுறுத்தியது.
- போதித்த மூம்மணிகள்- நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை.
- ஐந்து ஒழுக்கங்கள்:
- ஊறு செய்யாமை
- பொய்யாமை
- களவாமை
- உடைமை மறுத்தல்
- புலனடக்கம்
- சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள்: சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன்பாண்டியன், முதலாம் மகேந்திரவர்மப் பல்லவர்.
- சமணர்களின் தமிழ் படைப்புகள்:
- சிலப்பதிகாரம்
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- சூளாமணி
- யாப்பருங்கலங்காரிகை
- யாப்பருங்கலவிருத்தி
- நேமிநாதம்
- நன்னூல்
- அகப்பொருள் விளக்கம்
- இலக்கண விளக்கம்
- நிகண்டுகள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- பழமொழி
- திணைமாலை நூற்றைம்பது
சமண கட்டடக் கலை:
- இராஜஸ்தான் மவுண்ட் அபு- தில்வாரா கோயில்.
- கஜுராஸோ,சித்தூர், ரனக்பூர்- சமணர் கோயில்கள்.
- கோமதீஸ்வரர் சிற்பம்- கர்நாடக மாநிலம், சிரவணபெலகொலா.
- சிற்பங்கள்- உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார், சிரவணபெலகொலா, கழுகு மலை.
- சமணர்களின் புனித நூல்கள்- அங்கங்கள், பூர்வங்கள்.
பௌத்த சமயம்:
- தோற்றுவித்தவர்- சித்தார்த்தர் என்னும் கௌதமபுத்தர்.
- காலம்- கிமு.563 முதல் கிமு.483 வரை.
- இவர் இன்றைய நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து என்னும் ஊரில் பிறந்தார்.
- பெற்றோர்- சாக்கிய குலத்தை சேர்ந்த சுத்தோதனர், மாயாதேவி.
- மனைவி- யசோதரை, மகன் - இராகுலன்.
- மெய்யுணர்வு பெற்ற சித்தார்த்தர் புத்தர் ஆனார்.
- அறிவுணர்வு பெற்ற இடம் கயா.
- புத்தர் என்ற சொல்லின் பொருள்- நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொண்டவர்.
- முதல் போதனை- உத்திரப் பிரதேசத்தில் உள்ள மான்பூங்காவில்.
- நான்கு பேருண்மைகள்:
- உலகம் துன்பமயமானது.
- துன்பத்திற்குக் காரணம் ஆசையே.
- ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.
- ஆசையை ஒழிக்க எட்டு நெறிகள்.
ஆசையை ஒழிப்பதற்கான எண்வகை நெறிகள்:
- நல்ல நம்பிக்கை.
- நல்ல பேச்சு.
- நல்ல வாழும் வழி.
- நல்ல சிந்தனை.
- நல்ல முயற்சி.
- நல்ல நடத்தை.
- நல்ல செயல்.
- நல்ல தியானம்.
- பௌத்த சமயத்தை பின்பற்றிய அரசர்கள்- அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர்.
- புத்தசமயம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- ஹீனயானம்- புத்தரின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் ஆனால் உருவ வழிபாடு செய்யாதவர்கள்.
- மஹாயானம்- புத்தரின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் உருவ வழிப்பாடு செய்பவர்கள்.
- அசோகரின் தூண்களில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதே நமது தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள்.
- அசோகரின் தூண்களில் உள்ள தர்ம சக்கரம் தான் நமது தேசிய கொடியின் நடுவில் உள்ளது.
- பீகார்- பௌத்த துறவிகளின் விகாரங்கள் ( மடங்கள் ) நிறைந்தது.
- ஜாதகக்கதைகள்- பௌத்த வரலாற்றை விவரிக்கின்றன.
- அஜந்தா குகை ஒவியங்க்கள், எல்லோரா சிற்பங்கள்- புத்தரின் சிறப்பை விவரிக்கின்றன.
- காந்தாரக் கலைச் சிற்பங்கள் புத்த சமயத்தை சேர்ந்தவை.
- பிராத்தனை கூடம்- சைத்தியங்கள் எனப்பட்டன.
- மடங்கள்- விகாரங்கள் எனப்பட்டன.
- மறைநூல்- திரிபிடகம்- பௌத்த மத கொள்கையை கூறும் நூல்.
- வினயபிடகம், சுத்தபிடகம், அமிதம்மபிடகம் என மூன்று உட்பிரிவுகளை கொண்டது.
- பௌத்த நூல்கள்- மணிமேகலை, குண்டலகேசி.
- வட்டக் காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில்தான் பிரிபிடகம் நூல் வடிவி எழுதப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக