முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்

இரண்டாம் பருவம்.

புவியியல் 
  
                             சுழன்றும் சுற்றியும் வரும் பூமி

  • பல இயக்கங்களை கொண்டது பூமி
  • தற்சுழற்சி ( rotation ) மற்றும் சூரியனை (revolution) சுற்றி வருதல் ஆகிய இரண்டு இயக்கங்கள் முக்கியமானவை.
தற்சுழற்சி

  • பூமி தன்னை தானே சுற்ற 23 மணி 56 நிமிடம் எடுத்து கொள்கிறது.
  • இரவு-பகல் மாற்றம் பூமி தன்னை தானே சுற்றுவதால் ஏற்படுகிறது.
  • ஒரே நேரத்தில் பகல் அல்லது இரவு எல்லா இடத்திலும் ஏற்படாது.
  • ஆரியபட்டர்- இந்திய வானவியல் அறிஞர்-பூமி தன்னை தானே சுற்றுகிறது என்று விளக்கினார்.
  • பூமி சூரியனை சுற்றி வர சுமார் 365.24 நாட்கள் எடுகிறது.
  • பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக உள்ளது.இதனால்தான் பருவ கால மாற்றம் ஏற்படுகிறது.
  • லீப் ஆண்டில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளது
சூரியனை சுற்றி வருதல்

  • சூரியன் எப்பொழுதும் சரியாக கிழக்குதிசையில் உதிக்காது. பெரும்பாலும் தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் உதிக்கும்.
  • டிசம்பர் 22 அன்று அதிகபட்ச தென்கிழக்கு புள்ளியில் உதிக்கும். பின்னர் வடக்கு நோக்கி நகரும் இதுவே வட ஒட்டம் (உத்ராயணம்) எனப்படும்.
  • ஜூன் 21 அன்று அதிகபட்ச வடகிழக்கு திசையில் உதிக்கும். பின்னர் தெற்கு நோக்கி நகரும் இதுவே தென் ஒட்டம் (தட்சிணாயணம்) எனப்படும்.
  • மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே சம இரவு - சம பகல்( equinox) இருக்கும். 
  • பொதுவாக கோடைகாலம், வசந்தகாலம், குளிர்காலம் மற்றும் இலையுதிர்காலம் என நான்கு பருவங்கள் உள்ளன.
  • தமிழ் இலக்கியம் இளவேனில், முதுவேனில், கார், குளிர், பின்பனி மற்றும் முன்பனி என ஆறு பருவகாலங்களை குறிப்பிடுகின்றன.
வரலாறு

                                               வேதகாலம்
  • ஆரியர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவிற்கு வந்தனர்.
  • மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இவர்கள் இந்தியாவிற்குள் வந்தனர்.
  • இவர்கள் குடியேறிய பகுதி ஆரிய வர்த்தம் எனப்பட்டது.
  • இவர்கள் கால்நடைகளை கொண்டு வாழ்வு நடத்தினர்.
  • இக்காலக்கட்டம் வேதகாலம் எனப்படுகிறது. முற்பட்ட வேதகாலம், பிற்பட்ட வேதகாலம் என இரண்டாக பிரிக்கபடுகிறது.
முற்பட்ட வேதகாலம் அல்லது ரிக் வேதகாலம் (கிமு 1500-கிமு 1000)

  • இக்காலக்கட்டத்தில் ஆரியர்கள் பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் வாழ்ந்தனர்.
  • சப்தசிந்து- ஏழு நதிகள் பாயும் நிலம்.
  • ரிக் வேதம்- வேதகால மக்கள் வாழ்க்கை  முறைகளை அறிய உதவுகிறது.
  • ஆரியர்களின் சமூக சமுதாய அமைப்பு, குடும்பம்-கிராமம்-விஸ்-ஜனா-ஜனபதா.
          அரசியல்:
  • பல குடும்பங்கள் இணைந்தது கிராமம். அதன் தலைவர் கிராமணி எனப்பட்டார்.
  • பல கிராமங்கள் இணைந்து விசு(விஸ்) எனப்பட்டது. இதன் தலைவர் விசுவபதி எனப்பட்டார்.
  • பெரிய ஆட்சி அமைப்பு- ஜனா- இதன் தலைவர் ராஜன்( அரசன், பிரஜாபதி)
  • மகாஜனபதம்- பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு.
  • சபா- முதியோர் அவை
  • சமிதி- ஊர்மக்களின் பிரதிநிதிகளை கொண்ட அவை.
  • சேனானி- படைத் தலைவர்
         அரசரின் கடமைகள்:
  • அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து காத்தல், நாட்டின் எல்லையை விரிவுப்படுத்தல் மற்றும் நீதியை நிலைநாட்டல்.
          சமூக வாழ்க்கை

  • பெண் கல்வி அனுமதிக்கப்பட்டது.
  • பெண் கவிஞர்கள்- விஸ்வவாரா, அபலா, கோசா, லோபமுத்ரா
  • தொடக்கத்தில் சாதிப்பிரிவுகள் இல்லை.
  • விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பொருளாதார நிலை:
  • முக்கிய தொழில்- கால்நடை வளர்ப்பு, வேளாண்மை
  • பிற தொழில்கள் - தச்சு வேலை, நூல் நூற்றல், இரும்பு கருவிகள் செய்தல்.
  • பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்தது.
  • நிஷ்கா- தங்க அலகுகள்
உணவு:
  • சோம, சுரா-  பானங்கள்.
  • கோதுமை மற்றும் பார்லி முக்கிய தானியங்கள்.
சமயம்:
  • சூரியன், நெருப்பு, காற்று, வானம், மரங்கள் போன்றவற்றை வணங்கினர்.
  • இந்திரன், வருணன், அக்னி, எமன் ஆகிய கடவுள்களையும் வணங்கினர்.
  • கோயில்களோ சிலை வழிபாடோ இல்லை.
  • அஸ்வமேதா, இராஜசூயம், வாஜபேயம் ஆகிய யாகங்கள் நடத்தப்பட்டன.
பிற்பட்ட வேதகாலம் ( கிமு.1000- கிமு 600)

  • சாம, யாஜுர், அதர்வண வேதங்கள் தோன்றின.
  • கிழக்கு பகுதியில் பரவி இருந்தனர்.
அரசியல் நிலை:
  • அரசாட்சி பகுதி- கங்கை சமவெளி.
  • கோசலம், பாஞ்சாலம், விதேகம், குரு, மகதம், காசி, அவந்தி போன்ற அரசுகள் தோன்றின.
  • அரச பதவி பரம்பரை பதவியானது.
  • இராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்த நடத்தப்பட்டது.
  • சபா, சமிதி போன்ற அமைப்புகள் வலுவிழந்தன.
பொருளாதார நிலை:
  • இரும்பு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.
  • கால்நடைவளர்ப்பு பெருகியது.
  • நிஷ்கா, சுவர்ணா, சதமானா முதலான தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
  • சாதி அமைப்புமுறை தோன்றியது.
பெண்கள் நிலை:
  • சொத்துரிமை, அரசியல் உரிமை இல்லை.
  • குழந்தை திருமணம் வழக்கத்தில் இருந்தது.
  • உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
கல்வி:
  • குருகுல கல்விமுறை வழக்கத்தில் இருந்தது.
  • கார்கி, மைத்ரேயி கல்வியில் சிறந்த பெண்கள்.
  • தனுர்வேதம் எனப்படும் போர்கலை கற்பிக்கப்பட்டது.
சமயம்:
  • பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் போன்ற கடவுளை வழிப்பட்டனர்.
  • உயிர்பலியிடுவது நடைமுறையில் இருந்தது.
சமணமும் பௌத்தமும்
  • கிமு.6 ஆம் நூற்றாண்டு சிந்தனை புரட்சி காலமாகும்.
  • சமண மதமும் பௌத்த மதமும் தோன்றின.
  • சமண சமயம்- வர்த்தமான மகாவீரர்.
  • பௌத்த சமயம்- கௌதமபுத்தர்.
சமண சமயம்:
  • சமண சமயத்தினர் 24 தீர்த்தங்கரர்களை வழிப்படுகின்றனர்.
  • ஆதிநாதர்( ரிஷபதேவர் )- முதல் தீர்த்தங்கரர். 
      மகாவீரர்:
  • வர்ததமான மகாவீரர்- 24வது தீர்த்தங்கரர் ( சமண சமயத்திற்கு உறுதியான ஒரு அமைப்பை தந்தவர்.)
  • இவரது காலம் கிமு.534 முதல் கிமு.462 வரை.
  • பிறப்பு- குந்தக் கிராமம், வைசாலி நகர், இன்றைய பீகார் மாநிலம்.
  • பெற்றோர்- சித்தார்த்தர், திரிசலை
  • மனைவி- யசோதா, மகள்- அனோஜா பிரியதர்சனா.
  • 30வது வயதில் இல்வாழ்க்கை துறந்து 12 வருடங்கள் தியானம் செய்தார்.
  • ஜீனர் ( வெற்றியாளர் ), மகாவீரர் என்னும் சிறப்பு பெயர்களை பெற்றார்.
  • கொல்லாமை கொள்கையை பின்பற்றினர்.
  • சமண சமயம் உயிரிரக்கம் என்னும் அகிம்சையை வலியுறுத்தியது.
  • போதித்த மூம்மணிகள்- நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை.
  • ஐந்து ஒழுக்கங்கள்:
  1. ஊறு செய்யாமை
  2. பொய்யாமை
  3. களவாமை
  4. உடைமை மறுத்தல்
  5. புலனடக்கம்
  • சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள்: சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன்பாண்டியன், முதலாம் மகேந்திரவர்மப் பல்லவர்.
  • சமணர்களின் தமிழ் படைப்புகள்:
  1. சிலப்பதிகாரம்
  2. சீவக சிந்தாமணி
  3. வளையாபதி
  4. சூளாமணி
  5. யாப்பருங்கலங்காரிகை
  6. யாப்பருங்கலவிருத்தி
  7. நேமிநாதம்
  8. நன்னூல்
  9. அகப்பொருள் விளக்கம்
  10. இலக்கண விளக்கம்
  11. நிகண்டுகள்
  12. நாலடியார்
  13. நான்மணிக்கடிகை
  14. பழமொழி
  15. திணைமாலை நூற்றைம்பது
சமண கட்டடக் கலை:
  • இராஜஸ்தான் மவுண்ட் அபு- தில்வாரா கோயில்.
  • கஜுராஸோ,சித்தூர், ரனக்பூர்- சமணர் கோயில்கள்.
  • கோமதீஸ்வரர் சிற்பம்- கர்நாடக மாநிலம், சிரவணபெலகொலா.
  • சிற்பங்கள்- உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார், சிரவணபெலகொலா, கழுகு மலை.
  • சமணர்களின் புனித நூல்கள்- அங்கங்கள், பூர்வங்கள்.
பௌத்த சமயம்:
  • தோற்றுவித்தவர்- சித்தார்த்தர் என்னும் கௌதமபுத்தர்.
  • காலம்- கிமு.563 முதல் கிமு.483 வரை.
  • இவர் இன்றைய நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர்- சாக்கிய குலத்தை சேர்ந்த சுத்தோதனர், மாயாதேவி.
  • மனைவி- யசோதரை, மகன் - இராகுலன்.
  • மெய்யுணர்வு பெற்ற சித்தார்த்தர் புத்தர் ஆனார்.
  • அறிவுணர்வு பெற்ற இடம் கயா.
  • புத்தர் என்ற சொல்லின் பொருள்- நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொண்டவர்.
  • முதல் போதனை- உத்திரப் பிரதேசத்தில் உள்ள மான்பூங்காவில்.
  • நான்கு பேருண்மைகள்:
  1. உலகம் துன்பமயமானது.
  2. துன்பத்திற்குக் காரணம் ஆசையே.
  3. ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.
  4. ஆசையை ஒழிக்க எட்டு நெறிகள்.
   ஆசையை ஒழிப்பதற்கான எண்வகை நெறிகள்:
  1. நல்ல நம்பிக்கை.
  2. நல்ல பேச்சு.
  3. நல்ல வாழும் வழி.
  4. நல்ல சிந்தனை.
  5. நல்ல முயற்சி.
  6. நல்ல நடத்தை.
  7. நல்ல செயல்.
  8. நல்ல தியானம்.
  • பௌத்த சமயத்தை பின்பற்றிய அரசர்கள்- அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர்.
  • புத்தசமயம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.
  • ஹீனயானம்- புத்தரின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் ஆனால் உருவ வழிபாடு செய்யாதவர்கள்.
  • மஹாயானம்- புத்தரின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் உருவ வழிப்பாடு செய்பவர்கள்.
  • அசோகரின் தூண்களில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதே நமது தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள்.
  • அசோகரின் தூண்களில் உள்ள தர்ம சக்கரம் தான் நமது தேசிய கொடியின் நடுவில் உள்ளது.
  • பீகார்- பௌத்த துறவிகளின் விகாரங்கள் ( மடங்கள் ) நிறைந்தது.
  • ஜாதகக்கதைகள்- பௌத்த வரலாற்றை விவரிக்கின்றன.
  • அஜந்தா குகை ஒவியங்க்கள், எல்லோரா சிற்பங்கள்- புத்தரின் சிறப்பை விவரிக்கின்றன.
  • காந்தாரக் கலைச் சிற்பங்கள் புத்த சமயத்தை சேர்ந்தவை.
  • பிராத்தனை கூடம்- சைத்தியங்கள் எனப்பட்டன.
  • மடங்கள்- விகாரங்கள் எனப்பட்டன.
  • மறைநூல்- திரிபிடகம்- பௌத்த மத கொள்கையை கூறும் நூல்.
  • வினயபிடகம், சுத்தபிடகம், அமிதம்மபிடகம் என மூன்று உட்பிரிவுகளை கொண்டது.
  • பௌத்த நூல்கள்- மணிமேகலை, குண்டலகேசி.
  • வட்டக் காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில்தான் பிரிபிடகம் நூல் வடிவி எழுதப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:   பாபர்( 1526-1530)     | உமாயூன்1530-40, 1555-56)     | அக்பர்(1556-1605)     | ஜஹாங்கீர்( 1605-1627)     | ஷாஜகான்( 1628-1658)     | ஔரங்கசீப்( 1658-1707) பாபர் பிறப்பு: 1483 இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர். தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்) தாய்: செங்கிஸ்கான் இனம் 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார் 1526- முதல் பானிபட் போர் 1527- கான்வா போர் - மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார் 1528- சந்தேரி போர் - மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார் 1529- காக்ரா போர் - முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். 1530- மரணித்தார். இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி உமாயூன்: பிறப்பு- 1508 உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள். 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார். 1530ல் ஆட்சி பொறப்பேற்றார். சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது. 1539 - சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார். 1540 - கன்னோசி போரிலும் தோற்றார். 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோட...