ஐரோப்பியர் வருகை:
போர்ச்சிகீசியர்:
போர்ச்சிகீசியர்:
- 1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிளை கைப்பற்றினர்.
- 1487 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர் பார்த்தலோமியோ டயஸ் கடல் பயணம் மேற்கொண்டார்.
- ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை அடைந்தார்.அம்முனைக்கு புயல் முனை என்றும் நம்பிக்கை முனை என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா நம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் கோழிக்கோடு என்ற இடத்தை அடைந்தார்.
- மன்னர் சமெரிடம் வணிகம் செய்ய அனுமதி பெற்றனர்.
- 1505-1509 ஆம் ஆண்டு வரை போர்ச்சிகீசியர் வணிகத்தை கவணித்து கொள்ள பிரான்ஸ்கோ-டீ-அல்மெய்டா நியமிக்கப்பட்டார்.
- இவர் நிலநீர் கொள்கையை பின்பற்றினார்.
- 1510 ஆம் ஆண்டு அல்புகாக் என்பவர் நியமிக்கப்பட்டார்.
- பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து கோவாவை 1510 ஆம் ஆண்டு கைப்பற்றினார்.
- இவர் விஜயநகர பேரரசுடன் நட்புறவு கொண்டு இருந்தார்.
- 1565 ஆம் ஆண்டு தலைக்கோட்டை போருக்கு பிறகு விஜயநகர பேரரசு விழ்ச்சியுற்றது. இதுவே போர்ச்சிகீசியரின் விழ்ச்சிக்கும் வித்திட்டது.
டச்சுகாரர்கள்:
- 1602 ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டு மக்கள் சேர்ந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினர்.
- 1610 ஆம் ஆண்டு புலிகட் என்று அழைக்கப்பட்ட பழவேற்காட்டில் தங்கள் தலைமையகத்தை அமைத்தனர்.
- இவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் மோதல் இருந்து வந்தது.
- 1623 ஆம் ஆண்டு அம்பாய்னா என்ற இடத்தில் ஆங்கிலேய வியாபாரிகளை கொன்றனர். இந்நிகழ்ச்சி வரலாற்றில் அம்பாய்னா படுகொலை என அழைக்கப்படுகிறது.
- டச்சுகாரர்களுக்கு போட்டியாக ஆங்கிலேயர் இந்தியாவில் வணிபம் செய்ய ஆரம்பத்தனர்.
ஆங்கிலேயர்கள்:
- 1588 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய போர் கப்பலான ஸ்பானிய அல்மடா கப்பலை வென்று கடலில் தன் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது.
- டிசம்பர் 1,1600 இங்கலாந்து அரசி முதலாம் எலிசபெத் வணிபம் செய்ய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்தார்.
- 1608 ஆம் ஆண்டு வில்லியம் ஹாக்கிங்ஸ் வணிபம் செய்ய அனுமதி கோரி இந்தியா வந்தார்.
- 1615 ஆம் ஆண்டு சர் தாமஸ் ரோ வணிபம் செய்ய அனுமதி பெற்றார்.
- 1639 ஆம் ஆண்டு பிரான்ஸ் டே என்பவர் சந்திரகிரி அரசரிடம் இருந்து நிலப்பகுதியை பெற்று சென்னை நகரை உருவாக்கினார்.
- 1640 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
- 1699 ஆம் ஆண்டு ஔரங்கசீப்பின் அனுமதி பெற்று கல்கத்தாவில் வணிப மையத்தை ஏற்படுத்தினர்.
பிரெஞ்சுக்காரர்கள்:
- 1664 ஆம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 14ஆம் லூயின் அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்டது.
- 1668- சூரத் வணிப மையம்.
- 1669-மசூலிப்பட்டினம் வணிப மையம்.
- 1674- தஞ்சாவூர் மன்னரிடம் இருந்து சில நிலப்பகுதியை பெற்று பாண்டிச்சேரி நகரை உருவாக்கினார்.
- 1690- சந்திரநாகூர் வணிப மையம்.
- 1725- மாஹேய் வணிப மையம்.
- 1739- காரைகால் வணிப மையம்.
- 1742- டியூப்ளே பிரெஞ்சு கவர்னராக வந்தார்.
Hi mam please give extra information for upcoming group 4 exams
பதிலளிநீக்குOk dude
நீக்குThank u mam
பதிலளிநீக்கு